புதுதில்லி, அக். 1 - புல்டோசர்களைக் கொண்டு சொத்துக்களை இடிக்கும் விவ காரத்தில், அனைத்து குடிமக்க ளுக்கும் பொருந்தக்கூடிய வழிகாட்டு தல்களை வகுத்தளிக்க உள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், “இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இந்த வழக்கில் நாங்கள் என்ன தீர்வை முன்வைத்தாலும் அதை அனைத்து குடிமக்களுக்காகவும், அனைத்து நிறுவனங்களுக்காகவும் வைக்கிறோம்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
குற்றவாளிகள் அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்களின் சொத்துகளை புல்டோசர்களை கொண்டு இடிப் பதை பாஜக ஆளும் மாநில அரசுகள் வழக்கமாகக் கொண்டுள்ள நிலை யில், அதற்கு எதிராக தொடரப்பட்ட பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன் றத்தில் அக். 1 செவ்வாயன்று விசார ணைக்கு வந்தது. வாதங்கள் நிறை வடைந்த நிலையில், தீர்ப்பை நீதி மன்றம் ஒத்திவைத்தது.
மதச்சார்பற்ற நாடு
முன்னதாக, இந்த வழக்கை விசா ரித்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி. விஸ்வநாதன் அடங்கிய அமர்வு, “ஒருவர் குற்றம்சாட்டப்பட்ட வராகவோ அல்லது குற்றவாளியாகவோ இருப்பதால், சொத்துகளை இடிப்ப தற்காக அது ஒரு காரணமாக இருக்க முடியாது. சட்ட விரோதமாக ஒரு கட்டி டம் இடிக்கப்பட்டால்கூட அது அரசி யலமைப்பின் ‘நெறிமுறைகளுக்கு’ எதிரானது.
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இந்த வழக்கில் நாங்கள் என்ன தீர்வை முன்வைத்தாலும் அதை அனைத்து குடிமக்களுக்காகவும், அனைத்து நிறுவனங்களுக்காகவும் வைக் கிறோம். ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு ஒரு சட்டம் இருக்க முடியாது. அதேநேரத்தில் தெருக்கள், நடை பாதைகள், ரயில் பாதைகள், நீர்நிலை கள் போன்ற பொது இடங்களில் அங்கீ காரம் இல்லாத கட்டமைப்பு இருந் தால், அவற்றை இடிக்கும் வழக்கு களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது. எங்கள் உத்தரவு எந்த பொது இடத்திலும் ஆக்கிரமிப்பாளர் களுக்கு உதவாது என்பதை நாங்கள் உறுதி செய்வோம்” என்று தெரி வித்தது.
இந்த வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்படுவதாக நீதிபதிகள் கூறி யதை அடுத்து, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஒருவர், செப்டம்பர் 17-ஆம் தேதி உச்சநீதி மன்றத்தின் உத்தரவைக் குறிப்பிட்டு, குற்றம்சாட்டப்பட்டவர்கள் உட்பட எவரது சொத்துகளையும் அக்டோபர் 1 வரை அனுமதி இன்றி இடிக்கக் கூடாது என்ற உச்சநீதிமன்ற அமர்வின் இடைக்கால உத்தரவை நீட்டிக்க வலி யுறுத்தினார். அதற்கு பதில் அளித்த நீதிபதிகள், “இந்த விஷயத்தை நாங்கள் முடிவு செய்யும் வரை இடைக்கால தடை இருக்கிறது” என்று தெரிவித்தனர்.