புதுதில்லி, ஜுன் 6 - 18ஆவது மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை இழந்து கூட்டணிக் கட்சிகளின் தயவில் மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளது.
இந்நிலையில், தோல்வி முகத்தை திசை திருப்பும் நோக்கில் நாடாளுமன்ற பராமரிப்புப் பணி என்ற பெயரில், நாடாளு மன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி, அண்ணல் அம்பேத்கர், சத்ரபதி சிவாஜி உள்ளிட்டோரின் சிலைகள் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தின் கேட் எண் 5க்கு அருகில் உள்ள புல்வெளிக்கு மாற்றப்பட்டுள்ளன. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
சிலைகள் இடமாற்றம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில்,”சத்ரபதி சிவாஜி மகராஜ், மகாத்மா காந்தி மற்றும் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஆகியோரின் சிலைகள் நாடாளுமன்றத்து க்கு முன்னால் உள்ள முக்கிய இடங்களில் இருந்து அகற்றப்பட்டுள்ளன. இச்செயல் அட்டூழியம். தலைவர்களின் சிலைகளை அகற்றுவது அராஜகமான நடவடிக்கை, அவர்களை அவமானப்படுத்தும் செயல். இது கொடூரமானது” எனக் கூறியுள்ளார்.
காங்கிரஸ் ஊடக பிரிவுத் தலைவர் பவன் கேரா கூறுகையில்,“மகாராஷ்டிரா வாக்காளர்கள் பாஜகவுக்கு வாக்களிக்காத தால், சத்ரபதி சிவாஜி மற்றும் அம்பேத் கரின் சிலைகள் நாடாளுமன்றத்தில் அவை இருந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டுள் ளன. சற்று யோசித்துப் பாருங்கள், பாஜகவிற்கு 400 தொகுதிகளுக்கும் மேல் கிடைத்திருந்தால், அரசியலமைப்பு சாசனத்தை காப்பாற்றியிருப்பார்களா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.