நாடு முழுவதும் பிரதமர் மோடி மற்றும் பாஜக விற்கு எதிரான அலை தீவிரமடைந்து வருகிறது. பஞ்சாப், ஹரியானாவில் விவசாயிகளும், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிர தேசம், ராஜஸ்தான், பீகார் உள் ளிட்ட 12க்கும் மேற்பட்ட மாநிலங்க ளில் ராஜபுத்திரர்களும், உத்த ரப்பிரதேசத்தின் சில பகுதிகளில் ஜாட் மக்களும், “மோடி”, “பாஜக” வார்த்தைகளை கூறினாலே விரட்டி யடிக்கும் தென்னிந்திய மாநில மக்க ளும், “வன்முறை சார்ந்த கட்சி” என வடகிழக்கு மாநில மக்களும் என நாடு முழுவதும் மக்களவை தேர் தல் பிரச்சாரத்திற்கு வரும் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினரை பொதுமக்கள் விரட்டியடித்து வரு கின்றனர். இதனை மறைக்கவே பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக வினர் வெறுப்புப் பிரச்சாரத்தை கையாண்டும், தேர்தல் முறைகேடு மற்றும் வன்முறை சம்பவங்களை அரங்கேற்றியும் வருகின்றனர்.
மோடியின் பதிவில் “இந்தியா” கூட்டணிக்கு ஆதரவு கேட்கும் நிலை
வெறுப்புப் பிரச்சாரத்தை மக் கள் கண்டுகொள்ளாததால் அதற்கு மாற்றாக சமூக வலைத்தளங் களில் பாஜக ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. அதாவது வெளி யரங்கு பிரச்சார நிலைமைகளை சரிக்கட்ட சமாளிக்க சமூக வலைத் தளங்களில் பாஜக ஆக்டிவாக செயல்பட தொடங்கியது. ஆனால் அங்கேயும் பாஜகவிற்கு பலத்த சேதாரம் ஏற்பட்டுள்ளது. வெறுப் புப் பேச்சு, சர்வாதிகாரச் செயல் களால் சமூகவலைதள உலகில் மிக முக்கியமானவராகவும், அதிக விருப்பங்களை பெறுபவருமான பிரதமர் மோடியின் முகநூல், டுவிட் டர் எக்ஸ், இன்ஸ்டாகிராம் பதிவு களை நாட்டு மக்கள் கண்டுகொள்வ தில்லை. முன்பெல்லாம் பிரதமர் மோடியின் ஒவ்வொரு பதிவும் லட்சக்கணக்கில் விருப்பங்களை பெறும். ஆனால் தற்போது 3000 விருப்பங்களுக்கே திணறும் நிலை உருவாகியுள்ளது.
பிரதமர் மோடி தேர்தல் பிரச்சா ரம் மேற்கொள்ளும் ஒவ்வொரு நிகழ்வையும் உடனுக்கு உடன் முக நூல், டுவிட்டர் எக்ஸ், இன்ஸ்டா கிராம், யூடியூப்பில் பதிவிட்டு வரு கிறார். முன்பெல்லாம் மோடியின் பதிவுகளில் விமர்சனங்களை மூலம் வறுத்தெடுத்த நெட்டிசன்கள், தற் போது புதிய மாற்றாக “இந்தியா” கூட்டணிக்கு வாக்களியுங்கள் என பிரதமர் மோடியின் சமூக வலைதள கணக்கிலேயே கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மோடி யின் சமூகவலைத்தள பதிவுகளை திறந்தால், அதில், “காங்கிரஸ், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஆர்ஜேடி, சிவ சேனா, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சி களுக்கு வாக்களிக்குமாறு கருத்து மழை” பொழிந்து வருகின்றனர். இது பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினருக்கு கடும் குடைச் சலை கொடுத்துள்ளது. இதில் மிக முக்கியமான விஷயம் என்ன வென்றால் இளைஞர்கள் அதிகம் விரும்பும் மற்றும் ஆக்டிவாக இருக் கும் இன்ஸ்டாகிராம் சமூக வலைத் தளத்தில் பிரதமர் மோடியின் அதி காரப்பூர்வ கணக்கில், அவர் பதி விடும் ஒவ்வொரு பதிவிலும் “இந் தியா”ஆட்சி அமைக்கும் காலம் நெருங்கிவிட்டது என்றெல்லாம் கூறி, “இந்தியா” கூட்டணிக்கு வாக் களியுங்கள் என்று கருத்துக் களை பதிவு செய்து வருகின்ற னர். இதனால் மோடியின் சமூக வலைத்தள கணக்குகளில் விருப் பங்களை விட கருத்துக்களின் எண்ணிக்கை பிரம்மாண்டமாக உள்ளது.
தர்மசங்கடத்தில் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர்
பொதுவெளியில் பிரச்சாரம் மேற்கொண்டால் பொதுமக்கள் விரட்டியடிக்கிறார்கள் என்பதற் காக, பல நூறு கோடி செலவ ழித்து மோடி உள்ளிட்ட பாஜக வினர் முகநூல், டுவிட்டர் எக்ஸ், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள் ளிட்ட சமூகவலைத்தளங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். ஆனால் வெறும் 299 ரூபாய் டேட்டா ரீசார்ஜ் விலையில் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினரை இளை ஞர்கள், நெட்டிசன்கள் பந்தாடி வரு கிறார்கள். செல்லுமிடமெல்லாம் அடி மேல் அடி கிடைப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் பாஜக வினர் விழிபிதுங்கி இருக்கின்றனர்.