இந்தியாவில் கொரோனா பரவிய காலத்தில் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந் தியா நிறுவனத்தின் கோவி ஷீல்டு தடுப்பூசியும், பாரத் பயோ டெக்கின் கோவாக்சின் தடுப்பூ சிக்கும் ஒன்றிய அரசு அனு மதி அளித்த நிலையில், நாடு முழுவதும் பொதுமக்களுக்கு மூன்று டோஸ்கள் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசி பகிர்ந்து அளிக்கப்பட்டன.
இந்நிலையில், கோவி ஷீல்டு கொரோனா தடுப்பூசி யால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டதாக பிரிட்டன், சுவீ டன் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான ஆஸ்ட்ராஜெனிகா மீது இங்கிலாந்து நாட்டு நீதி மன்றத்தில் 51க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் தொடர்பான பதில் மனுதாக்கலில்,”தங்கள் நிறுவனத்தின் தடுப்பூசிகள் கார ணமாக திராம்போசைட்டோ பேனியா சிண்ட்ரோம் (டிடிஎஸ்) எனப்படும் பக்கவிளைவுகள் ஏற் படலாம். இதனால் கடுமையான தலைவலி, வயிற்று வலி, கால் வீக்கம், மூச்சுத் திணறல் மற்றும் நரம்பு தளர்ச்சி உள்ளிட்ட பிரச்ச னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது” என உண்மையை ஒப்புக் கொண்டது. ஆஸ்ட்ராஜெனிகா வின் ஒப்புதல் வாக்குமூலத் தால் இந்தியர்கள் உள்ளிட்ட தடுப்பூசியை செலுத்திக்கொண்ட உலக நாடுகளின் மக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக மோடி அரசு இது வரை எவ்வித கருத்தும் தெரி விக்காமல் இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது. இந்நிலையில், தேர்தல் பத்திரம் மூலம் கோவிஷீல்டு கொரோனா தயாரிப்பு நிறுவன மான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்திடம் பாஜக ரூ.52 கோடி நன்கொடை பெற் றுள்ளது. இதனால் தான் இந்த விவகாரம் தொடர்பாக மோடி அரசு அமைதியாக உள்ளதாக என “இந்தியா” கூட்டணிக் கட்சி கள் கண்டனம் தெரிவித்துள் ளன.
இவ்வளவு நாட்களாக ஏன் நீக்கவில்லை?
இந்நிலையில், ஆஸ்டரா ஜெனிகாவின் அறிக்கை - கோவிஷீல்டு நிறுவனம் அளித்த ரூ.52 கோடி நன்கொடை விவ காரம் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருவதால், இந்த விவகாரம் மக்களவை தேர்தல் களத்தில் எதிரொலிக்கலாம் என அஞ்சி கோவின் (CoWIN) முகப்பு மற்றும் தடுப்பூசி சான்றி தழில் உள்ள மோடி புகைப் படத்தை ஒன்றிய பாஜக அரசு நீக்கியுள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோவிஷீல்டு தடுப்பூசி - பாஜகவின் ரூ.52 கோடி நன் கொடை விவகாரத்தின் காரண மாகவே மோடியின் படம் நீக் கப்பட்டதாக சமூக வலைத் தளங்களில் பலர் கண்டனம் தெரி வித்து வருகின்றனர். ஆனால் மக்களவைத் தேர்தலை ஒட்டி தேர்தல் ஆணையத்தின் உத்த ரவின்படியே பிரதமர் மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ள தாக ஒன்றிய பாஜக அரசு மழுப்பி யுள்ளது. விதிமுறைகள் என் றால் இவ்வளவு நாட்களாக ஏன் தேர்தல் ஆணையம் நீக்க வில்லை? என்ற கேள்விக்கணை கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.