நாட்டில் வலுவான நீதித்துறை இருந்திருந்தால் பிரதமர் மோடியும், உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்ய நாத்தும் இந்த நேரம் சிறையில் இருந்திருப்பார்கள். நாட்டின் நீதித்துறை நிலைமை கவலை அளிக்கும் நிலையில் உள்ளது.
சங்கராச்சாரியார் நிச்சலானந்த சரஸ்வதி
மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கரை நீக்க 60 எம்.பி.,க்கள் நோட்டீஸ் சமர்ப்பித்தனர். இது முன்னெப்போதும் இல்லாதது. ஜனநாயகத்தின் தாய்க்கு சோகமான நாள். நாடாளுமன்ற அவை செயல்பாட்டில் சமநிலையை அனுமதிக்காதவர்களை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது.
மூத்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் கபில் சிபல்
உத்தரப்பிரதேச பாஜக அரசும், ஆட்சியாளர்களும் மாநிலத்தின் சகோதரத்துவத்தை சிதைத்து வருகின்றனர். ஒருபுறம் இந்திய அரசியலமைப்பின் 75ஆவது ஆண்டு கொண்டாடப்படுகிறது. மறுபுறம் அரசியலமைப்பு உரிமைகள் பறிக்கப்படுகிறது.
சமாஜ்வாதி எம்.பி., டிம்பிள்
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மகாராஷ்டிரா முதல்வர், “இவிஎம் முதல்வர்” என்றே அழைக்கப்படுவார். மகாராஷ்டிரா தேர்தல் முடிவு குறித்து கண்டிப்பாக உச்சநீதிமன்றத்தை முறையிடுவோம்.
காங்கிரஸ் எம்.பி., பிராணிதி ஷிண்டே
மஸ்கிருத பல்கலைக்கழக யூனியன் தேர்தல்அனைத்து இடங்களிலும் எஸ்எப்ஐ அமோக வெற்றி
எர்ணாகுளம் கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத் தின் காலடியில் உள்ளது ஸ்ரீ சங்கராச் சார்யா சமஸ்கிருத பல்கலைக்கழ கம். இந்த பல்கலைக்கழக யூனியன் தேர்த லின் 7 இடங்களிலும் இந்திய மாணவர் சங்கத் தின் வேட்பாளர்கள் போட்டியின்றி அபார வெற்றி பெற்றனர். பல்கலைக்கழக சங்கத் தலைவராக அஷ்வந்த், துணைத் தலைவராக எஸ்.அனாமிகா, பொதுச் செயலாளராக கே.அஷ்வின், இணைச் செயலாளர்களாக இ.அத்வைத், கே.கே.அரு ணிமா, கமிட்டி உறுப்பினர்களாக குருவத் மற்றும் ஸ்ருதி சுரேஷ் ஆகியோர் போட்டியின்றி வெற்றி பெற்றனர்.
“இந்திய மாணவர் சங்கத்திற்கு எதிராக தொ டர்ந்து பொய்க்கதைகள் பரப்பும் கேஎஸ்யு (காங்கிரஸ் மாணவர் அணி) - எம்எஸ்எப் (முஸ்லிம் மாணவர் கூட்டமைப்பு) - ஏபிவிபி (பாஜக - ஆர்எஸ்எஸ்) - ஊடகக் கூட்டணிக்கு மாணவர்களின் பதிலே இந்த வெற்றி” என இந்திய மாணவர் சங்கத்தின் கேரள மாநிலத் தலைவர் கே.அனுஸ்ரீ, செயலாளர் பி.எம்.அர்ஷா ஆகியோர் கூட்டாக தெரிவித்தனர்.
ராய்ப்பூர்
நக்சலைட்டுகள் எனக் கூறி 7 பேர் சுட்டுக்கொலை?
பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநி லத்தின் நாராயண்பூருக்கு அருகே தெற்கு அபுஜ்மாத் காட்டில் பாதுகாப்பு படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 7 நக்சலைட்டுகள் உயிரிழந்ததாக செய்தி கள் வெளியாகியுள்ளன. ஆனால் நக்ச லைட்டுகள் எனக் கூறி அப்பாவி மக்கள் 7 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக மற்றொரு செய்தியும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.