india

img

கல்நெஞ்சம் கொண்ட மோடி அரசு

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உத்தரகண்ட் மாநி லத்தின் சில்க்யாரா சுரங்கப்பாதை இடிந்து 41  தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். உலகளவி லான தொழில்நுட்பங்களுடன் 17  நாட்கள் கடுமையாகப் போராடி யும், தொழிலாளர்களை மீட்க  முடியாத சூழலில், கடைசியாக  எலிவளை சுரங்கத் தொழிலாளர் களின் தீவிர முயற்சியின் மூலம் 41 தொழிலாளர்களும் உயிரோடு  மீட்கப்பட்டனர். இதையடுத்து உல கம் முழுவதும் சுரங்க எலிவளை தொழிலாளர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்தன.

இந்நிலையில், வடகிழக்கு தில்லியின் கஜூரி காஸ்  பகுதியில் வசித்து வரும் சுரங்க எலிவளை தொழிலா ளர்களில் ஒருவரான வக்கில் ஹசன் என்பவரின் வீடு  ஆக்கிரமிப்பு நிலத்தில் இருப்பதாகக் கூறி, புதனன்று  மாலை ஒன்றிய பாஜக அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள தில்லி மேம்பாட்டு ஆணையம் முன்னறிவிப்பின்றி இடித்து தரைமட்டமாக்கியுள்ளது.

கதறி அழுத ஹசன்
இதுதொடர்பாக வக்கில் ஹசன் பிடிஐ செய்தி நிறு வனத்திடம், “உத்தரகண்டின் சில்க்யாரா சுரங்கப்பாதை யில் இருந்து 41 பேரைக் காப்பாற்றியதற்கான பரிசாக,  எங்கள் வீடு இடிக்கப்பட்டதா?” என கேள்வி எழுப்பி கண்ணீருடன் கதறி அழுதார்.