india

img

வழக்கம்போல் திங்களன்றும் நடந்த விவசாயிகள் நாடாளுமன்றம்

விவசாயிகள் நாடாளுமன்றம் திட்டமிட்டபடி திங்களன்றும் நாடாளுமன்ற வீதியில் நடைபெற்றது.

தேசிய கீதம் இசைத்தபிறகு, நாடாளுமன்றத்தின் அமர்வு தொடங்கியது. மின்சார திருத்தச்சட்டம் குறித்து உறுப்பினர்கள் உரையாற்றினார்கள். அரசாங்கம் சென்ற ஆண்டு வாக்குறுதி அளித்ததுபோல் அது அரசாங்கத்தால் திரும்பப்பெறப்படவில்லை என்பதையும், இப்போது நடைபெறும் மழைக்காலக் கூட்டத்தொடரில் அது கொண்டுவரப்பட்டிருப்பதையும் பேசிய உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினார்கள்.  இந்தச் சட்டத்தைத் திரும்பப்பெறாதது ஏமாற்றம் அளிப்பதாகக் கூறிய உறுப்பினர்கள், உடனடியாக அதனைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.

திங்கள் அன்று நடைபெற்ற நாடாளுமன்றத்தில் அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து ஏராளமான விவசாயிகள் வருகை தந்தனர். ஒடிசா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலிருந்தும்,  தமிழ்நாட்டிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் வந்துகொண்டிருப்பதாகவும், நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

;