உத்தரப்பிரதேசம் மாநிலம் தங்கள் கட்சியின் கோட் டையாக கூறிக்கொள்ளும் பாஜகவிற்கு 18ஆவது மக்களவை தேர்தலில் பலத்த அடி கிடைத்தது. மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 44 தொகுதிகளை இந்தியா கூட் டணி கைப்பற்றிய நிலையில், பாஜக வேறும் 36 தொகுதிகளை மட்டுமே வென்று மண்ணைக் கவ்வியது. உத்தரப்பிரதேசத்தில் போட்டியிட்ட ஒன்றிய அமைச்சர் கள் ஸ்ம்ருதி இரானி, அஜய் மிஸ்ரா உள்ளிட்ட 7 ஒன்றிய அமைச் சர்கள் படுதோல்வியடைந்தனர்.
இதில் கேரி (லக்கிம்பூர்) தொகு தியில் வீழ்ந்த பாஜக மூத்த தலை வரும், ஒன்றிய உள்துறை இணை அமைச்சருமான அஜய் மிஸ்ரா வின் தோல்வியை இன்று வரை அத்தொகுதி மக்கள் கொண்டாடி வருகின்றனர். காரணம் கேரி மக்க ளவை தொகுதிக்கு உட்பட்ட லக் கிம்பூரில் கடந்த 2021 அக்டோபர் மாதம் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகளின் பேரணிக்குள் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா தனது காரை நுழைத்து 5 விவசாயிகளை கொன் றார். இதை தொடர்ந்து ஏற்பட்ட வன் முறையில் மேலும் 8 பேர் கொல் லப்பட்டனர். பலர் படுகாயமடைந்த னர்.
இந்நிலையில், அஜய் மிஸ்ரா வை தோற்கடித்த கேரி (லக்கிம் பூர்) தொகுதியின் மக்களை சம் யுக்தா கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்) விவசாயிகள் சங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதிநிதிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து லக்கிம்பூர் சம்பவத்தில் உயிரிழந்த 5 தியாகிகளின் குடும்ப உறுப்பினர்களையும், உத்தரப்பிர தேச பாஜக அரசால் போலி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு விவசாயிகளையும் சந் தித்து, “பாஜகவை அம்பலப்படுத்த வும், எதிர்க்கவும் மற்றும் தண்டிக்க வும் எஸ்கேஎம் அழைப்பின்படி பிரச்சாரம் செய்ததற்காக லக்கிம் பூர் மக்களுக்கு எஸ்கேஎம் வாழ்த் துக்களை தெரிவித்துக் கொள்கி றோம். மேலும் விவசாயிகள் இயக் கத்தால் ஈர்க்கப்பட்ட மக்கள், விவ சாயிகள் கசாப்புக் கடைக்காரர் களின் கொள்கையை உடைய ஒன்றிய உள்துறை அமைச்சர் அஜய் மிஸ்ராவை தோற்கடித்ததில் தங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்து கிறது. இந்த வெற்றி இந்தியா முழு வதும் உள்ள விவசாயிகளை உற்சா கப்படுத்தியுள்ளது. அக்டோபர் 3, 2021 அன்று முதல் வழங்கிய ஐந்து தியாகிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து பாது காப்புப் படைகளையும் உத்தரப்பிர தேச மாநில அரசு திரும்பப் பெற் றுள்ளது. தூதுக்குழு மூலம் பாது காப்பை உடனடியாக மீட்டெடுக்க வேண்டிய நடவடிக்கையை தொடங்குவோம். வரவிருக்கும் எஸ்கேஎம்-மின் பொதுக்குழு கூட் டத்தில் அஜய் மிஸ்ரா மற்றும் அவ ரது மகன் ஆஷிஷ் மிஸ்ரா ஆகி யோரைக் கைது செய்து தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு அழைப்பு விடுப்போம். மேலும் இந்த பிரச்சனையில் ஒரு வலுவான போராட்டத்தை கட்டமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்” எனக் கூறி வழக்குகளின் முன் னேற்றம் மற்றும் பிற பிரச்சனை கள் குறித்து எஸ்கேஎம் விவசாயி கள் சங்க பிரதிநிதிகள் விவாதித்த னர்.
அதன்பின்னர் செய்தியாளர் கள் சந்திப்பில் எஸ்கேஎம்-இன் விவசாய சங்க பிரதிநிதிகள் குழு கூட்டாக அளித்த பேட்டியில், “எம்.எஸ்.சுவாமிநாதன் கொள்கை யின்படி குறைந்தப்பட்ச ஆதார விலை, கொள்முதல் உத்தரவாதம், அனைத்து விவசாயிகளுக்கும் கடன் பாக்கி, ஆழ்துளைக் கிணறு களுக்கு இலவச மின்சாரம், 300 இலவச வீட்டு மின்சாரம் உள்ளிட்ட வைகளுக்கு தீர்வு வழங்கப்படும் என உறுதியளித்தபடி எம்எஸ்பி கோரிக்கையை மோடி அரசு நிறை வேற்றத் தவறிவிட்டது. விவசாயி கள் இயக்கத்தின் போது அரசாங் கத்தால் மாநில அரசை கடுமை யாக வலியுறுத்தினர். மேலும் நான்கு விவசாயிகள் மீது போடப் பட்டுள்ள பொய் வழக்குகளை வாபஸ் பெற்று, விவசாயிகளை கொன்றதாக குற்றம் சாட்டப் பட்டுள்ள அஜய் மிஸ்ரா மற்றும் ஆஷிஷ் மிஸ்ரா ஆகியோரை தண் டிக்க நடவடிக்கை எடுக்க வேண் டும்” என கூறினர்.
எஸ்கேஎம்-இன் பிரதிநிதிகள் குழுவில் பிகேயு சார்பில் ராகேஷ் தியாகத், ஏஐகேஎஸ் சார்பில் முகுத் சிங்,, கேகேயு சார்பில் ரமிந்தர் பாட்டியாலா, டிகேஎஸ் சார்பில் தேஜிந்தர் விர்க், ஏஐகேஎம்எஸ் சார்பில் டாக்டர் ஆஷிஷ் மிட்டல், ஏஐகேஎம் சார்பில் ஈஸ்வரி பிர சாத் குஷ்வாஹா, என்ஏபிஎம் சார்பில் ரிச்சா சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.