நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்ட மன்ற தேர்தலில் மகாயுதி கூட்டணி (பாஜக, சிவசேனா (ஷிண்டே), தேசியவாத காங்கி ரஸ் (அஜித்)) 230 தொ குதிகளில் வென்று ஆட்சியை கைப்பற்றி யது.
இந்நிலையில், 11 நாட்கள் இழுபறிக் குப் பிறகு வியாழக் கிழமை மாலை பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிரா முதல்வ ராக 3-ஆவது முறையாக பதவி யேற்றார். தேவேந்திர பட்னா விஸுக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மேலும் மகாராஷ்டிராவின் துணை முதல்வராக சிவசேனா தலைவர் ஏக் நாத் ஷிண்டேவும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவாரும் பதவியேற்ற னர். மும்பை ஆசாத் மைதானத்தில் நடை பெற்ற விழாவில் பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட் டோர் பங்கேற்றனர்.