india

img

கட்சிகளுக்கு நன்கொடை அளிப்போரை அறிய நாட்டு மக்களுக்கு உரிமை உண்டு

புதுதில்லி, பிப். 15 - அநாமதேய தேர்தல் பத்திரங்கள் திட்டம் மூலம் அரசியல் கட்சிகள் நன் கொடை பெறும் முறை அரசிய லமைப்புக்கு விரோதமானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொட ர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

மேலும், “தேர்தல் பத்திரங்கள் விற் பனை செய்வதை உடனடியாக நிறுத்து வதுடன், 2019-ஆம் ஆண்டு முதல் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன் கொடை அளித்தோர் விவரங்களை யும், தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட அனைத்து பங்க ளிப்பின் விவரங்களையும் எஸ்பிஐ வங்கி மார்ச் 6-க்குள் வழங்க வேண்டும்; அவற்றைத் தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் ஏப்ரல் 13-க்குள் பதிவேற்ற வேண்டும்” என்றும் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு அதிரடியாக ஆணை பிறப்பித்துள்ளது.

தேர்தல் பத்திரங்கள் திட்டம் அரசியலமைப்புச் சட்ட மீறல்
அத்தீர்ப்பில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது:

“அரசைக் கேள்வி கேட்கும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளது  என பல தருணங்களில் நீதிமன்றங்கள் கூறி உள்ளன. அதன்படி பார்க்கை யில், பெயர் குறிப்பிடாத தேர்தல் பத்திரங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு எதிராக உள்ளன. கட்சி களுக்கு யார் நன்கொடை கொடுக் கிறார்கள் என்பதை மக்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும். 

மாறாக, நன்கொடை தரு வோர் குறித்த விவரங்களை தெரி விக்கத் தேவையில்லை என்பது வாக் காளர்களின் உரிமைகளைப் பறிப்ப தாக உள்ளது. அரசியல் கட்சிகளுக்கு வரம்பற்ற நிதியை அனுமதிக்கும் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங் கள் தன்னிச்சையானது. 

கார்ப்பரேட்டுகள் கைமாறு எதிர்பாராமல் இருப்பார்களா?

தேர்தல் பத்திர விவரங்களை வழங் காமல் இருப்பதற்கான காரணங் களை ஒன்றிய அரசு தெரிவிக்க வில்லை. தேர்தல் பத்திரங்கள் மூலம்  கருப்புப் பண விவகாரத்தைக் கையாள்கிறோம் என்ற ஒன்றிய அர சின் நியாயப்படுத்துதல், நியாயமான தாக இல்லை. கார்ப்பரேட் நிறு வனங்கள் கட்சிகளுக்கு நிதி தரும் போது அதற்கு கைமாறு எதிர்பார்க்க வாய்ப்பு உள்ளது. கருப்புப் பணத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தை அடைய தேர்தல் பத்திரங்களைத் தவிர வேறு வழிகள் உள்ளன.

சட்டத் திருத்தங்கள் அனைத்தும் ரத்து
எனவே, அநாமதேய தேர்தல் பத்திரங்கள் திட்டமானது, அர சியலமைப்பின் பிரிவு 19(1)(a)-இன் படி குடிமக்களின் தகவல் அறியும் அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளது என்பதால், தேர்தல் பத்தி ரங்கள் திட்டத்தை ரத்து செய்கிறோம். மேலும், அநாமதேய தேர்தல் பத்தி ரங்கள் திட்டத்திற்காக, நிறுவனங்கள் சட்டத்தின் 182(1)-இல் மேற்கொள்ளப் பட்ட திருத்தம், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் கொள்கைகளை மீறுவதாகவும், நிறுவனங்கள் சட்டத்தின் பிரிவு 183(3), வருமான வரிச்  சட்டத்தின் பிரிவு 13A(b) ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் அர சியல் கட்சிகளுக்கான மக்கள் பிரதி நிதித்துவச் சட்டத்தின் பிரிவு 29C-ஐ  மீறுவதாகவும் உள்ளதால், இந்த சட்டத்திருத்தங்களும் ரத்து செய்யப் படுகின்றன.

நன்கொடை அளித்தோர் விவரங்களை வெளியிடுக!
தேர்தல் பத்திரம் (Electoral Bonds) விநியோகிப்பதை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) வங்கி உடனே நிறுத்த வேண்டும். 2019 ஏப்ரல் 12 அன்று உச்சநீதிமன்றத்தின் இடைக் கால உத்தரவுக்குப் பிறகு வாங்கப் பட்ட அனைத்துப் பத்திரங்களின் விவ ரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் மார்ச் 6-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்; அந்த விவரங்கள் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மார்ச் 13-க்குள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்; பணமாக மாற்றப்படாத தேர்தல் பத்தி ரங்கள் உடனடியாக உரிய நிறுவனங் களிடமே திருப்பி அளிக்கப்பட வேண்டும்.” இவ்வாறு உச்சநீதி மன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

வரலாறு படைத்த தீர்ப்பு : சிபிஎம்

தேர்தல் பத்திரங்கள் திட்டம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோத மானது என்று கூறி அதனைக் கிழித்தெறிந்துள்ள உச்ச நீதிமன்ற த்தின் வரலாறு படைத்திடும் தீர்ப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு பாராட்டுதல்களைத் தெரிவித்துள்ளது.

“இந்த தீர்ப்பின் மூலம், நன்கொடை அளிக்கும் கார்ப்பரேட்டுகள் யார் என்று வெளியிடாமல், கார்ப்பரேட்டுகளிடமிருந்து ஆளும் கட்சி நிதி பெறும் நேர்மையற்ற திட்டம் முற்றிலுமாக கிழித்து எறியப்பட்டுள்ளது.

தேர்தல் பத்திரங்கள் திட்டம் ஊழலை சட்டப்பூர்வமாக்கியதால் இது கொண்டுவரப்பட்ட நாளிலிருந்தே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ‘இதனை ஏற்க மாட்டோம்’ என்று பிரகடனம் செய்திருந்தது. தேர்தல் பத்திரங்கள் திட்டத்தினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழக்கு தொடுத்திருந்தது. இதேபோல் வேறு பலரும் வழக்கு தொடுத்திருந்தார்கள்.  

இத்திட்டத்திற்கு எதிராக மனுவில் கூறப்பட்டிருந்த முக்கியமான அம்சங்கள் அனைத்தையும் உச்ச நீதிமன்றம் சரியானவை என்று உயர்த்திப்பிடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இப்போதாவது அனைத்து அரசியல் கட்சிகளும் சமமான அளவில் போட்டியிடக்கூடிய விதத்தில் தேர்தல் செலவினங்கள் தொடர்பாக வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையான முறையில் நிதி பெறுவது தொடர்பாக சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படுவது அவசியமாகும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கூறியுள்ளது.   (ந.நி.)  

தேர்தல் நேரத்தில் வந்துள்ள இத்தீர்ப்பு, ஊழலுக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற போலியான பிம்பத்தை ஊதி பெரிதாக்கும் பாஜகவின் கோட்டையில் விழுந்த பலத்த அடி. நீலச்சாயம் வெளுத்து நரியின் வேஷம் கலைந்து நிற்கிறது பாஜக.

கே.பாலகிருஷ்ணன்

சிபிஐ(எம்), மாநிலச் செயலாளர்