தில்லி, ஜன. 23 - நாடாளுமன்றத் தேர்தலுக் கான உத்தேசத் தேதியை தேர்தல் ஆணையம் வெளி யிட்டதாக செவ்வாயன்று சில ஊடகங்களில் செய்தி கள் வெளியாகின.
தில்லியில் உள்ள மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தலைமை தேர்தல் அதிகாரி அனுப்பிய சுற்றறிக்கையை மேற்கோள் காட்டி இந்த செய்திகள் வெளியாகின. சுற்றறிக்கையில், ஏப்ரல் 16-ஆம் தேதிக்கு ஏற்ற வாறு தேர்தல் சார்ந்த திட்டங்களை வகுக்கும்படி மாநிலத் தேர்தல் அதி காரிகளுக்கு உத்தரவிடப் பட்டிருந்ததாக தெரிவிக்கப் பட்டிருந்தது.
இதற்கிடையில் தில்லி தலைமை தேர்தல் அதி காரி அலுவலகம், தங்களின் சுற்றறிக்கைக்கு விளக்கம் அளித்துள்ளது. அதில், “சுற்றறிக்கையை குறிப் பிட்டு தேர்தல் தொடங்கும் உத்தேச நாள்தானா? என்ப தை தெளிவுபடுத்தும்படி சில ஊடகக் கேள்விகள் வரு கின்றன.
தலைமை தேர்தல் ஆணையத்தின் தேர்தல் திட்டமிடலின்படி அதிகாரி கள் தங்கள் பணிகளை திட்ட மிட்டு செய்து முடிப்பதற்கு மட்டுமே இந்த உத்தேச தேதி குறிப்பிடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.