புதுதில்லி,டிசம்பர்.27- முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவையடுத்து அடுத்த 7 நாட்களுக்குத் துக்கம் அனுசரிக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
இந்திய நாட்டின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) நேற்று இரவு 9.51 மணி அளவில் உடல்நலக்குறைவால் புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இதையடுத்து, மன்மோகன் சிங்கின் உடல் டெல்லியில் உள்ள அவரது வீட்டிற்ல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. இவரது உடலுக்குக் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்திவருகின்றனர். மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தில்லி சென்றுள்ளார்.
மன்மோகன் சிங் மறைவையொட்டி 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்ததையடுத்து நாட்டில் உள்ள அனைத்து இடங்களிலும் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன.