ரஜினிக்கு வழங்கப்பட்டுள்ள தாதா சாகேப் பால்கே விருதுக்கும் தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மத்திய அமைச்சர் பிரதாப் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
இந்திய திரைப்படத்துறையில் சாதனை படைப்பவர்களுக்கு வழங்கப்படும் மிகவும் உயர்ந்த விருது தாதா சாகேப் பால்கே விருது. இந்நிலையில், 51-வது தாதா சாகேப் பால்கே விருது இன்று அறிவிக்கப்பட்டது.
அதில், இந்திய சினிமா துறையில் சிறந்த பங்களிப்பை அளித்த நடிகர் ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் தேர்தலை கருத்தில் கொண்டு நடிகர் ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் விருது அறிவிக்கப்பட்டுள்ளதா பிரகாஷ் ஜவடேகரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ஜவடேகர், தமிழக சட்டசபை தேர்தலுக்கும், ரஜினிகாந்திற்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார்.
தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்திற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள், திரைத்துறை பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.