புதுதில்லி, ஏப். 4- பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை தோற்கடிக்கவேண்டும்; மக்களவையில் சிபிஐ(எம்) மற்றும் இடதுசாரி கட்சிகளின் பலத்தை அதிகரிக்க வேண்டும்; மத்தியில் மதச்சார்பற்ற மாற்று அரசாங்கம் அமைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். - ஆகிய மூன்று இலக்குகளு டன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, இந்திய வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. 18வது மக்களவை தேர்தலுக்கான மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை கட்சியின் மத்தியக்குழு அலுவலக மான ஏ.கே.ஜி. பவனில் வியாழ னன்று (ஏப்.4) வெளியிடப்பட்டது.
கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், பிருந்தா காரத், தபன்சென், நிலோத்பல் பாசு ஆகி யோர் தேர்தல் அறிக்கையை வெளி யிட்டனர். இத்தேர்தல் அறிக்கை யின் முக்கிய அம்சங்கள்வருமாறு: மோடி தலைமையிலான பத்தாண்டு கால பாஜக ஆட்சியில் மதச்சார்பின்மை, ஜனநாயகம், இந்தியக் குடியரசு ஆகியவை சந்தித்துள்ள கடும் நெருக்கடியை எதிர்கொள்ளும் நேரத்தில் 18-ஆவது மக்களவை தேர்தல் நடை பெறுகிறது.
மிக மிக முக்கியமான தேர்தல் அரசியலமைப்பின் நான்கு தூண்களாக உள்ள மதச்சார்பற்ற ஜனநாயகம், பொருளாதார இறை யாண்மை, கூட்டாட்சி மற்றும் சமூக நீதி ஆகியவை திட்டமிட்ட முறையில் தகர்க்கப்படுவதை இந்திய நாடு இதுவரை இல்லாத அளவில் கண்டுள்ளது. மாநில அதிகாரம் மற்றும் நாடாளுமன்ற பெரும்பான்மை, மோடி அர சாங்கத்தின் எதேச்சதிகார-வகுப்பு வாத ஆட்சி, உழைக்கும் மக்களின் உரிமைகளை நொறுக்க பாசிச பாணி முறைகளைப் பயன்படுத்தி யது, நச்சுமிக்க வகுப்புவாத சித்தாந்தத்தை திணிக்கவும், மக்க ளை மதவாத அடிப்படையில் பிரிக்கவும் செய்தது; இந்தி யாவை உலகின் மிகவும் சமத்துவ மற்ற சமூகங்களில் ஒன்றாக ஆக்கியுள்ளது - போன்றவை காரணமாகவே 18ஆவது மக்களவைத் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்தியக் குடியரசின் மதச்சார் பற்ற, ஜனநாயகத் தன்மையை வெறித்தனமான, சகிப்புத் தன்மை யற்ற, வெறுப்பு மற்றும் வன்முறை அடிப்படையிலான எதேச்சதிகார மற்றும் பாசிச குணம் கொண்ட இந்துத்துவ ராஜ்ஜியமாக மாற்றும் பாஜகவின் முயற்சிக்கு எதிராக இந்தியாவைக் காப்பா ற்றுவதுதான் இந்த மக்களவைத் தேர்தல். மேற்கூறப்பட்ட அனைத் தும் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்சின் வெளிப்படை யாகக் கூறப்பட்ட இலக்குகள் ஆகும்.
போராட்டங்களால் கட்டப்பட்ட எதிர்ப்பு
17-ஆவது மக்களவைத் தேர்த லுக்குப் பிறகு கடந்த 5 ஆண்டு களில் (2019- 2024) உழைக்கும் மக் கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், தொழிலாளர் கள், பழங்குடியினர், தலித் மக்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் ஜனநாயகப் போராட் டங்கள் மூலம் நாட்டில் பிரம்மாண்ட எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.இந்தப் போராட்டங்களில் முக்கிய அம்ச மாக இருப்பது விவசாயிகளின் வரலாற்றுப் போராட்டம் ஆகும். இப்போராட்டங்களுக்கு எதிராக மோடி அரசாங்கத்தால் கட்ட விழ்த்து விடப்பட்ட அதிகாரத்தை யும், அடக்குமுறையையும் விவ சாயிகள் வலிமையுடன் ஒன்றி ணைந்து தோற்கடிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளனர்.
இடதுசாரி அரசின் சாதனை
இதே காலகட்டத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலை மையிலான இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் (எல்டி எப்) ஆளும் கேரள மாநில அரசு செயல்படுத்திய மாற்றுக் கொள் கைகளின் சாத்தியக்கூறுகளையும் நாம் கண்டோம். நிதி ரீதியாக ஒன் றிய அரசின் அனைத்து நெருக்கடி களையும் உடைத்து மக்கள் சார்பு மற்றும் மதநல்லிணக்க கொள்கை களின் கலங்கரை விளக்காக வெளிப் பட்டது.
தேசபக்தக் கடமை
பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் தோல்வியை முதலில் உறுதி செய்வது ஒவ்வொரு தேசபக்தரின் கட்டுப்பாடான கட மை என்பதை தெளிவாக புரிந்து கொண்டு இந்திய மக்கள் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது அறிக்கையைவைக்கிறது. இந்தக் கூட்டுக் கடமையை வலுப் படுத்தவும், மத்தியில் மதச்சார்பற்ற அரசாங்கத்தை நிறுவுவதற்கான அனைத்தையும் செய்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியளிக்கிறது. இதற்கும் மக்கள் நலக் கொள்கைகளை உறுதி செய்வதற்கும், நாடாளு மன்றத்தில் சிபிஐ(எம்) வலுவாக இருப்பது அவசியம் ஆகும். மதச் சார்பின்மை என்ற கொள்கையை சமரசமின்றி கடைப்பிடிக்க போராடுவோம் என சிபிஐ(எம்) உறுதியளிக்கிறது.
அரசியல், அரசு மற்றும் நிர்வா கம் ஆகியவற்றில் இருந்து மதம் பிரிந்தே இருக்கும் என்ற கொள்கை யை சமரசமின்றி கடைப்பிடிக்க போராடுவோம் என்று சிபிஐ(எம்) உறுதி யளிக்கிறது. மேலும் வெறுப்பு பேச்சு மற்றும் அது தொடர்பான குற்றங்க ளுக்கு எதிரான சட்டத்திற்காகவும், குடி யுரிமை திருத்த சட்டத்தை (சிஏஏ) ரத்து செய்வதிலும் சிபிஐ(எம்) தனது கொள் கையின்படி உறுதியாக உள்ளது.
உபா (UAPA) மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA) போன்ற அனைத்து கடுமையான சட்டங்களை யும் நீக்கவும், தேர்தல் ஆணையம் மற் றும் சுதந்திரமாக செயல்படும் மத்திய அமைப்புகளின் சுயாட்சியைப் பாது காப்பதற்கும், மக்களின் ஜனநாயக உரி மைகளைப் பாதுகாப்பதற்கும் வலுப் படுத்துவதற்கும் சிபிஐ(எம்) தொடர்ந்து உறுதியாக நிற்கும்.
பொதுத்துறை காப்போம்
இந்தியப் பொருளாதார இறை யாண்மையைப் பாதுகாக்கும் கொள் கைகளிலும், பொதுத்துறையை தனி யார்மயமாக்கும் நடவடிக்கைகள் கை விடப்பட வேண்டும் என்பதிலும் சிபிஐ(எம்) உறுதியாக உள்ளது. பெரும் பணக்காரர்கள் மீதான வரி, சொத்து வரி மற்றும் பரம்பரை சொத்துக்கள் மீதான வரி ஆகியவை சட்டமாக்கப்பட வேண்டும்; தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகளை மாற்ற வேண்டும்; மாறாக, தொழிலாளர் நலன் காக்கும் சட்டங்கள் வர வேண்டும்; சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளின்படி குறைந்த பட்ச ஆதார விலை (எம்எஸ்பி)க்கு சட்டப்பூர்வ உத்தரவாதம்; உணவுப் பாதுகாப்பு, மற்றும் இந்திய விவசாயி களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் சிபிஐ(எம்) உறுதியாக நிற்கும்.
வேலை உரிமையை
உரத்து முழங்குவோம்!
வேலை செய்யும் உரிமையை அர சியலமைப்பு உரிமையாக சேர்க்க வேண்டும்; அரசு மற்றும் பொதுத்துறை களில் காலியாக உள்ள பணியிடங் களை உடனடியாக நிரப்ப வேண்டும். வேலைகளை உருவாக்கக்கூடிய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையை (MSME) வலுப்படுத்தவும், விரிவுபடுத்தவும் வேண்டும் ; தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டத்திற்கான (MGNREGA) பட்ஜெட் ஒதுக்கீடுகளை இரட்டிப்பாக்க வேண்டும்; நகர்ப்புற வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும்; வேலையில்லா கால உதவித்தொகை வழங்கப்பட வேண்டும், அனைவருக் கும் கல்வி உரிமையை வலுப்படுத்த வேண்டும்; உயர்கல்வி தனியார்மய மாக்கலை நிறுத்த வேண்டும்; கல்விக் கான பட்ஜெட் ஒதுக்கீட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தது 6 சதவீதமாக அதிகரிக்க வேண்டும்; கல்வி பட்ஜெட் வணிகமயமாக்கல், வகுப்புவாதமயமாக்கல் மற்றும் மைய மயமாக்கல் கொள்கைகளை முற்றாக மாற்றிட வேண்டும் என்பதில் சிபிஐ(எம்) உறுதியாக நிற்கிறது.
மாநில உரிமைகள்
மோடி அரசால் கடுமையாக நீர்த் துப்போன மாநிலங்களின் அரசியல மைப்பு உரிமைகளை மீட்டெடுப்ப தற்காக சிபிஐ(எம்) உறுதியாக நிற்கி றது. இதே போல ஒன்றிய அரசு விதிக் கும் கூடுதல் கட்டணம் மற்றும் செஸ் வரிகளின் பங்கு உட்பட மொத்தமாக வசூலிக்கும் ஒன்றிய வரிகளில் 50 சத வீதத்தை மாநிலங்களுக்குப் பகிர்ந்த ளிக்க வேண்டும்; மாநில முதல்வரால் அமைக்கப்பட்ட மூன்று முக்கிய நபர் களைக் கொண்ட குழு ஆளுநரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதிலும் சிபிஐ(எம்) உறுதியாக நிற்கிறது.
தனியார் துறையில் இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம் இயற்றுவது; மற்றும் இடஒதுக்கீடு பதவிகளில் உள்ள காலி யிடங்களை நீர்த்துப்போகாமல் உட னடியாக நிரப்புவது; காலாவதியான 2021இன் பொது மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சாதிக் கணக்கெ டுப்பு நடத்துவது அவசியம் என்றும்; வன்குற்றங்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான செயல்முறை நீதியை வலுப்படுத்துவதற்காக, பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு உட னடியாக அமல்படுத்தப்பட வேண்டும் என்பதிலும் சிபிஐ(எம்) உறுதியாக உள்ளது.
தேர்தல் சீர்திருத்தம்
தேர்தல் அமைப்பில் பணபலத் தைப் பயன்படுத்துவதைத் தடுக்க உடனே தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும்; தேர்தல் களுக்கு மாநில அரசு நிதியுதவி மற்றும் அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நன்கொடைகளை தடை செய்ய வேண் டும்; ஜனநாயகத்தை வலுப்படுத்த கார்ப்பரேட் நிறுவனங்கள் நிதியளிக்க வேண்டும், அதே போல கார்ப்பரேட் நிதி பங்களிப்புகள் மாநில தேர்தல் நிதியில் வரவு வைக்கப்பட்டு மாநில நிதிக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை சிபிஐ(எம்) வலியுறுத்து கிறது.
சிபிஐ(எம்) அணிசேரா வெளியு றவுக் கொள்கையை எப்பொழுதும் வற் புறுத்துகிறது; நமது நாட்டின் பாது காப்பின் ஒவ்வொரு அம்சத்தையும் அணிசேரா கொள்கை பாதுகாக்கும்; அதே வேளையில் நமது அண்டை நாடு களுடன் நல்லுறவுக்காக சிபிஐ(எம்) எப்பொழுதும் துணை நிற்கும்.
ஜம்மு-காஷ்மீர் மக்களின் உரிமை களைப் பாதுகாக்க பிரிவு 370 வழங் கிய தன்னாட்சி அந்தஸ்துக்காகவும், மாநில சட்டசபைக்கு உடனடித் தேர்தல் கள் மற்றும் முழு மாநிலம் என்ற நிலை யை மீட்டெடுப்பதற்காகவும் சிபிஐ(எம்) தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது.
மக்களின் வாழ்க்கை நிலைமைகள் மிக மோசமடைந்து வரும் நிலையில், முதலாளித்துவத்தின் கூட்டாளியாக உள்ள தற்போதைய கொள்கை திசை வழியும், வகுப்புவாத - கார்ப்பரேட் கள்ளக் கூட்டும் தலைகீழாக மாற்றப்பட வேண்டும் என்பதை சிபிஐ(எம்) வலு வாக எடுத்துரைக்கிறது.