பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் பகுதியில் கடந்த 2020-ஆம் ஆண்டு 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட தலித் சமூகத்தைச் சேர்ந்த 19 வயது பெண் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பெற்றோர், உறவினர்கள் ஒப்புதலின்றி மாவட்ட நிர்வாகமே நள்ளிரவில் அந்த தலித் பெண்ணின் உடலை எரித்தது. இந்த பாலியல் வன்படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேரில் 3 பேரை விடுதலை செய்துள்ளது சிறப்பு நீதிமன்றம். ஆனால் உத்தரப்பிரதேச பாஜக அரசு இன்னும் மேல்முறையீடு செய்யாமல் உள்ளது. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிருந்தா காரத், சுபாஷினி அலி ஆகியோர் ஹத்ராஸ் தலித் பெண்ணின் வீட்டிற்கு சென்று “நாங்கள் இருக்கிறோம்” என அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர்.