இந்தியாவில் இன்று புதிதாக 6,155 பேருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கோவிட் பாதிப்பு அதிகரித்துள்ளது. இது தொடர்பாக ஒன்றிய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று காலை 8 மணி நிலவரப்படி, புதிதாக 6,155 பேருக்கு கோவிட் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 11 பேர் உயிரந்துள்ளனர். தற்போது வரை 31,194 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.