india

img

இந்தியாவில் மீண்டும் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனாவின் ஒரு நாள் பாதிப்பு மீண்டும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரே நாளில் 1,31,968 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ளாகி உள்ளனர். இது நாடு முழுவதும் மருத்துவ உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று  வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,31,968  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,30,60,542 உயர்ந்துள்ளது. 
நேற்று ஒரே நாளில் 780 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,67,642 ஆக உயர்ந்துள்ளது. 
இதேபோல் நேற்று ஒரே நாளில் 61,899 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,19,13,292 ஆக உயர்ந்துள்ளது. 
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 9,79,608 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்நிலையில் நாடு முழுவதும் இதுவரை 9,43,34,262 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 
 

;