india

img

இந்தியாவில் இதுவரை 3.5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி!

புதுதில்லி, மார்ச் 17-
இந்தியாவில் இதுவரை 3.5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்றுக்கு  கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 
முதல் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது பின்னர் 65-வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் இணை நோய்கள் உள்ள 45-வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 
இந்நிலையில், இந்தியாவில் இதுவரை 3.5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று மட்டும் 21 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

;