இந்தியாவில் ஒரேநாளில் 3.29 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 3,29,942 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,29,92,517 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்புகளால் கடந்த 24 மணிநேரத்தில் 3,876 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,46,116 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 3,56,082 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1,90,27,304 ஆக உயர்வடைந்துள்ளது. 37,15,221 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.