india

img

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 4,529 போ் உயிரிழப்பு!

இந்தியாவில் ஒரேநாளில் கொரோனாவுக்கு 4,529  போ் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 2,67,334 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,54,96,330 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்புகளால் கடந்த 24 மணிநேரத்தில் 4,529 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை  2,83,248 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 3,89,851 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 2,19,86,363 ஆக உயர்வடைந்துள்ளது.

;