india

img

இந்தியாவில் புதிதாக 46148 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 46148 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை படிப்படிகாக குறையத்துவங்கி உள்ளது. இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 46 ஆயிரத்து 148 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,02,79,331 ஆக அதிகரித்துள்ளது. 
மேலும் ஒரே நாளில் 979 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 3,96,730 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 58,578 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,93,09,607 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 5,72,994 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
இந்நிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் இதுவரை 32,36,63,297 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

;