india

img

இந்தியாவில் ஒரே நாளில் 4.14 லட்சம் பேருக்கு கொரோனா!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து 2வது நாளாக இன்று உச்சமடைந்துள்ளது. 

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 4 லட்சத்து 14 ஆயிரத்து 188 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 14 லட்சத்து 91 ஆயிரத்து 598 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்புகளால் கடந்த 24 மணிநேரத்தில் 3,915 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,34,083 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து 31 ஆயிரத்து 507 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 76 லட்சத்து 12 ஆயிரத்து 351 ஆக உயர்வடைந்துள்ளது.

36,45,164 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

;