india

img

இந்தியாவில் புதிதாக 39726 பேருக்கு கொரோனா!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 39729 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை வெயிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.
இந்தியாவில்  கடந்த 24 மணி நேரத்தில் 39,726 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,15,14,331 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 154 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,59,370 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 20,654 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,10,83,679 ஆக உயர்ந்துள்ளது. 
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 2,71,282 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
நாடு முழுவதும் நேற்று வரை 3,93,39,817 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

;