india

img

இந்தியா:ஒரே நாளில் 1,45,384 பேருக்கு கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 145384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை தற்போது மீண்டும்  வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்று மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,45,384   பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நாடு முழுவதும்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,32,05,926 உயர்ந்துள்ளது.
இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 794 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,68,436 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் நேற்று ஒரே நாளில் 77,567 பேர் குணமடைந்துள்ளனர். ,இதையடுத்து கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,19,90,859 ஆக உயர்ந்துள்ளது. 
தற்போதைய சூழலில் நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 10,46,631 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் இதுவரை  9,80,75,160 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது

;