கொரோனா 3ஆம் அலைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை படிப் படியாக குறைந்து வருகிறது.
இந்நிலையில், கொரோனா 3ஆம் அலைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகியுள்ளது.
அதன்படி, கொரோனா தொற்றின் புதிய அலைக்கு எந்த நேரமும் குழந்தைகள் நல மருத்துவர்கள் தயாரக இருக்க வேண்டும்
ஒவ்வொரு குழந்தைகள் மருத்துவமனையிலும் 100 படுக்கைகள் தயாராக வைத்து இருக்க வேண்டும்
ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளும் ஐ.சி.யு வசதி படுக்கைகளும் ஏற்படுத்திட வேண்டும்.
3வது அலையை எதிர்கொள்ளும் வகையில் குழந்தைகள் சிறப்பு மருத்துவரை பொருப்பு அதிகாரியாக நியமிக்க வேண்டும்
குழந்தைக்கான அவசர சிகிக்சை அளிக்கும் வகையில் பொதுமருத்துவர்கள், மயக்கவியல் துறை மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.