india

‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ யோசனை அரசியலமைப்புக்கு எதிரானது!

புதுதில்லி, ஜன. 20 - ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ தொடர்பான திட்டம், இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கட்ட மைப்பிற்கு எதிரானது என்று காங்கிரஸ் தெரி வித்துள்ளது. இந்தியாவின் வலுவான ஜனநாயகம் பாதுகாக்கப்பட ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ யோசனை கைவிடப்பட வேண்டும் என்றும் வலி யுறுத்தியுள்ளது.

நாடாளுமன்றம், மாநில சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி மன்றங்களுக்கு ஒரே நேரத் தில் தேர்தல் நடத்துவது குறித்து, இந்திய குடி யரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழுவை ஒன்றிய பாஜக அரசு அமைத்துள்ளது. இந்தக் குழு, 6 தேசிய கட்சிகள், 33 மாநில கட்சிகள் மற்றும் 7 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப் படாத கட்சிகளின் கருத்துக்களைப் பெறும் நட வடிக்கையில் இறங்கியுள்ளது.

அரசியல் கட்சி களும் தங்களின் கருத்துக்களை ராம்நாத் கோவிந்த் குழுவிற்கு அனுப்பி வருகின்றன. ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக உள்ளிட்ட கட்சிகள் ஏற்கெனவே பதில் கடிதங்களை அனுப்பியுள்ள நிலையில், காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் மல்லிகார் ஜூன கார்கே 4 பக்கக் கடிதத்தை, ராம்நாத் கோவிந்த் குழுவின் செயலாளர் நித்தன் சந்திரா வுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதில்,

“ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கருத்தை இந்திய தேசிய காங்கிரஸ் கடுமை யாக எதிர்க்கிறது. ஒரு செழிப்பான மற்றும் வலு வான இந்திய ஜனநாயகத்தை நிலைநிறுத்துவ தற்கு, ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான முழு யோசனையும் கைவிடப்பட வேண்டும்” என்பதுடன், “உயர்மட்டக் குழுவையும் உடனடி யாக கலைக்க வேண்டும்; குடியரசு முன்னாள் தலைவரின் ஆளுமை மற்றும் பதவியை, ஒன்றிய அரசு துஷ்பிரயோகம் செய்ய அனு மதிக்கக்கூடாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

“எதிர்க்கட்சிகளுக்கு கணிசமான பிரதிநி தித்துவம் வழங்காமல் ஏற்படுத்தப்பட்டு இருக்கும், ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ குறித்த உயர்மட்டக் குழு என்ற அமைப்பே மிகவும் ஒரு சார்புடையதாக தெரிகிறது. இந்தக் குழுவில் முன்னாள் குடியரசுத் தலைவரே இருக்கும் போதிலும், அந்தக் குழு கட்சிகளிடம் ஆலோச னைகள் கேட்பது வெறும் பாவனைதான் என்று சாதாரண வாக்காளர்கள் கூட எண்ணும் அள விற்கு இருப்பது வேதனை அளிக்கிறது.

ஏன் என்றால், என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பது ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டு விட்டது. இந்த திட்டத்துக்கு ஆதரவான உறுதி யான கருத்துக்கள் ஏற்கெனவே பொதுவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இதன் நன்மைகள் மற்றும் தீமைகளை பற்றி தெரிந்து கொள்வதற்காக உண்மையான முயற்சிகள் எடுக்கப்படவில்லை.

உண்மையில் இந்தக் குழுவின் தலைவராக இருக்கும் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் தலைவராக பதவி வகிக் கும்போது, 2018-ஆம் ஆண்டு, நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றும் போது, அடிக் கடி தேர்தல்கள் நடத்தப்படுவது வளர்ச்சிக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார். தற்போது கடிதமும் அதே கருத்தை மீண்டும் முன்வைக்கிறது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பணத்தை மிச்சப்படுத்த உதவும் என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) அறிக்கையை, உயர்மட்டக்குழு முன்னிலைப்படுத்துகிறது. ஆனால், “2014 மக்களவைத் தேர்தலை விவி பாட் (VVPAT) இயந்திரங்கள் மூலம் நடத்துவ தற்கான செலவு சுமார் ரூ. 3,870 கோடி என தேர்தல் ஆணையம் மதிப்பிட்டுள்ளது.

இதற்கு மாறாக, 2016-2022 இடையே ஒன்றிய ஆளும் கட்சியான பாஜக நன்கொடையாக 10 ஆயிரத்து 122 கோடி ரூபாயைப் பெற்றுள்ளது. அதில், 5 ஆயிரத்து 271 கோடியே 97 லட்சம் ரூபாய் கோடிக்கணக்கில் அநாமதேய தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, ஒரே நேரத்தில் தேர்தல்களுக்கு பதிலாக, நிதியின் வெளிப் படைத்தன்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்” என்றும் கார்கே தனது கடிதத்தில் கேள்விகளை எழுப்பி யுள்ளார்.