india

அசம்பாவிதம் ஏற்படும் முன் நடவடிக்கை வேண்டும் “ராகுல் காந்தி பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்!”

புதுதில்லி, ஜன. 24 - அசாமில் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு காங்கிரஸ் அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அமித் ஷா-வுக்கு கடிதம் ஒன்றை கார்கே அனுப்பியுள்ளார். “அசாம் போலீசார் தொடர்ச்சியாக ராகுல் காந்தியின் பாதுகாப்பு வளை யத்தை பாஜக தொண்டர்கள் உடைத்து நெருங்க அனுமதிக்கின்றனர் அல்லது மீறல்களை கண்டு கொள்ளாமல் துணை நிற்கின்றனர்.

ராகுலுக்கும் அவருடைய குழு வினரின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றனர்.  அசாமில் யாத்திரையின் முதல் நாளில் இருந்தே ஒவ்வொரு நாளும் பல்வேறு இடையூறுகள் ராகுல் காந்திக்கு ஏற்படுத்தப் பட்டு வருகின்றன. அத்துனை இடையூறு களுக்கு மத்தியிலும் ராகுல் காந்தி திட்ட மிட்டபடி யாத்திரையை மேற்கொண்டுள்ளார்.

அதனால் நீங்கள் தலையிட்டு அசாம் முதல்வரும், காவல்துறை டிஜிபி-யும் ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு அறிவுறுத்த வேண்டும். ஏதும் அசம்பாவித சம்பவங்கள் நடந்து ராகுல் காந்திக்கு தனிப் பட்ட முறையில் பெரிய பாதிப்பு ஏற்படு வதற்கு முன்னர் இதில் தலையிட்டு அவரு டைய, யாத்திரையில் ஈடுபட்டுள்ள காங் கிரஸ் தொண்டர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என்று கடிதத்தில் கார்கே வலியுறுத்தியுள்ளார்.

அசாமில் ராகு லின் யாத்திரை மீது பாஜக-வினர் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதுடன், பாஜக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, நேரடியாக தலையிட்டு, ராகுலின் யாத்திரைக்கு தடை விதித்தும், ராகுல் மீது வழக்கு பதிவு செய்தும் அடக்குமுறையில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.