india

img

விவசாயிகளுடனான 11 ஆம் கட்ட பேச்சுவார்த்தை தொடக்கம்

புதுதில்லி, ஜன.22-
மத்திய அரசு விவசாயிகளுடனான 11ஆம் கட்ட பேச்சுவார்த்தை இன்று தொடங்கியது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் 50 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசுடன் ஏற்கெனவே நடைபெற்ற 10 கட்டப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) 11ஆம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
மேலும், குடியரசு தின நாளில் டிராக்டர் பேரணி நடைபெறும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

;