கடலோர காவல்படை ஹெலிகாப்டர் விபத்து
2 பேர் உடல் மீட்பு; ஒருவரது உடலை தேடும் பணி தீவிரம்
இந்திய கடலோரக் காவல் படை யின் ஹெலிகாப்டர் ஒன்று குஜ ராத் கடலோரப் பகுதியில் அர பிக்கடலில் விழுந்து விபத்துக்குள்ளான தில், அதில் பயணித்த விமானி, டைவர் என 2 பேரின் உடல்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர். மற்றொருவரின் உடலைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து கடலோரக் காவல் படையின் செய்தித் தொடர்பாளர் அமித் உனியால் கூறுகையில், ‘‘விமானி விபின் பாபு, டைவர் கரண் சிங் ஆகியோரின் உடல்கள் செவ்வாய்க்கிழமை இரவு மீட்கப்பட்டன. மற்றொரு விமானி ராகேஷ் ராணாவின் உடலைத் தேடும் பணி தொடர்கிறது.
இந்திய கடலோர காவல்படையின் மேம்படுத்தப்பட்ட இலகுரக ஹெலிகாப் டரில் (ஏஎல்ஹெச்) பயணித்த நான்கு பேரில், டைவர் கவுதம் குமார் சம்பவம் நடந்த சிலமணி நேரத்தில் மீட்கப்பட்டார். மீத முள்ள இரண்டு விமானிகள் மற்றும் ஒரு டைவரை தேடும் பணி நடந்து வந்தது.
இந்தநிலையில் செவ்வாய்க்கிழமை இரவு விமானி விபின் பாபு மற்றும் டைவர் கரண் சிங் ஆகியோரின் உடல்கள் மீட்கப் பட்டுள்ளன. மற்றொரு விமானி ராகேஷ் ராணாவின் உடல் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை.
ஸ்ரீநகர்
ஜம்முவில் காங்கிரஸ் ஆட்சி அமையும் ராகுல் காந்தி பேச்சு
ஜம்மு- காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சி அமையும் என்று எதிர்க்கட்சி தலை வர் ராகுல் காந்தி கூறியுள்ளார். அனைவரையும் ஒன்றிணைத்து ஜம்மு காஷ்மீரில் அரசை நடத்துவதே எங்க ளின் இலக்காக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.