india

img

தில்லி முதல்வர் கெஜ்ரிவாலின் ஜாமின் மனு - இன்று தீர்ப்பு!

தில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமின் மனு மீது தில்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க இருக்கிறது.

மதுபான கொள்கை வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ஆம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அவரது காவல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் தேர்தல் நடைபெறும் சமயத்தில் அமலாக்கத்துறை தன்னை கைது செய்தது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று கெஜ்ரிவால் தரப்பிலிருந்து தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, கெஜ்ரிவால் கைதின் மூலமாக அவரது கட்சியை முழுமையாக முடக்குவது தான் அமலாக்கத்துறை மற்றும் பாஜவின் முக்கிய திட்டமாக இருக்கிறது என்று அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க இருக்கிறது.