india

img

சிங்கு பகுதியில் பாஜக வன்முறை.... யெச்சூரி கண்டனம்....

புதுதில்லி:
விவசாயிகளின் போராட்டத்தை சீர்குலைப்பதற்காக சிங்குவில் ஜெய் ஸ்ரீராம் முழக்கத்துடன் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதாகவும், யுஏபிஏ சட்டப்பிரிவை பயன்படுத்தி போராட்டத்தை எதிர்கொள்ள மத்திய அரசு முயற்சிப்பதாகவும் சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கண்டித்துள்ளார்.

சிங்குவில் காவல்துறை தாக்குதலை ஒரு விபத்து என்றுபார்க்க முடியாது. போராட்டத்தை சீர்குலைக்க பாஜக எப்போதும்இதே காரியத்தைச் செய்து வருகிறது. சிங்கு போராட்டக்களத்தை அடைந்த ஒரு கும்பல் போராட்டக்காரர்களில் சிலரை தாக்கினர்.தில்லி காவல்துறையினரால் இந்த வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதாகவும், விவசாயிகள் மீது யுஏபிஏ சட்டத்தை திணிப்பதன் மூலம் போராட்டத்தை நாசப்படுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது என்பது தெளிவாகிறது என்றும் செய்தியாளர்களிடம் யெச்சூரி கூறினார்.

;