india

img

பெட்ரோல் விலைக்கு எதிர்ப்பு தெரிவித்தால் ஆப்கான் செல்லலாம்- உளரும் பாஜக எம்எல்ஏ

நாடு முழுவதும் தொடர்ந்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்ந்து கொண்டே வருகிறது. ஏற்கனவே கொரேனா தொற்று பாதிப்பு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த பொதுமக்களின் அன்றாட வாழ்வில் பெட்ரோல் டீசல் விலை மேலும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.  இதனால் பெட்ரோல் - டீசல் விலையில் சுமார் 60 சதவிகிதம் அளவிற்கு உள்ள கலால் வரியைகுறைக்க வேண்டும் என்று இடது சாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க எம்.எல்.ஏ ஹரி பூஷன் தாக்கூர் பச்சால், “ஆப்கானிஸ்தான் போரால் இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. ஆப்கனில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஆனால் இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுவது போல், வேறு எங்கும் பாதுகாப்பு அளிக்கப்படுவது இல்லை. 
இந்தியாவில் வாழ அச்சப்படுவோர்கள், தாராளமாக ஆப்கானிஸ்தானுக்கு செல்லலாம். அங்கு பெட்ரோல், டீசல் விலை மிகவும் குறைவு. அங்கு சென்றால்தான் இந்தியாவின் அருமை தெரியவரும். காடுகளுக்குக் கூட இங்கு சட்டத் திட்டங்கள் உள்ளன. ஆனால் ஆப்கானிஸ்தானில் எந்த சட்டத் திட்டங்களும் இல்லை. அநீதி காரணமாகவே ஆப்கானிஸ்தான் பிளவுபட்டது” என்று ஹரி பூஷன் தாக்கூர் கூறியுள்ளார்.
 

;