பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற 27 எதிர்க்கட்சிகள் ஒன்றி ணைந்து “இந்தியா” என்ற பெய ரில் புதிய கூட்டணி உருவாகியுள் ளது. தற்போது “இந்தியா” கூட்டணி யில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வரு கிறது. 27 கட்சிகள் இருப்பதால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை யில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் எழுகின்றன. உடனே பாஜக மற் றும் ஒரு சில ஊடகங்கள் “இந் தியா” கூட்டணியில் இந்தக் கட்சி கூட்டணியை விட்டு விலகியது, பெரும் பின்னடைவு என நாள்தோறும் புரளியை கிளப்பி வருகின்றன.
ஆர்எல்டி விலகிவிட்டதாக புரளி
உத்தரப்பிரதேசத்தில் சமாஜ் வாதி தலைமையில் “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் மக்களவைத் தேர்தலை சந்திக்க உள்ளன. காங் கிரஸ் கட்சிக்கான தொகுதி பங்கீடு (11) ஏற்கெனவே நிறைவு பெற்ற நிலையில், மேற்கு உத்தரப்பிர தேசத்தில் ஜாட்கள் மற்றும் விவசாயி கள் மத்தியில் கணிசமான ஆத ரவைக் கொண்ட ஜெயந்த் சவுத்ரி யின் ராஷ்ட்ரிய லோக் தளத்திற்கு 7 இடங்கள் வழங்க உள்ளதாக சமாஜ் வாதி அறிவித்து இருப்பதாக தக வல் வெளியாகியுள்ளது. ஆனால் விரும்பிய தொகுதிகள் கிடைக்காத தாலும், பாஜக தரும் 5 இடங்களை பெற்றுக் கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையப் போவ தாகவும், தில்லியில் பாஜக மூத்த தலைவரை ஜெயந்த் சவுத்ரி செவ் வாயன்று சந்தித்தார் என்றும் ஊட கங்கள் பொய்யாக செய்தி வெளி யிட்டு வருகின்றன.
பாஜகவின் புரளிக்கு சிவ்பால் பதிலடி
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையவுள்ளதாக வெளியாக தக வலுக்கு சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரும், அகிலேஷின் சித்தப்பா வுமான சிவ்பால் சிங் மறுப்பு தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,”ஜெயந்தை பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். ஆர்எல்டி மதச்சார்பற்ற கொள்கை உடையது. பாஜக ஊடகங்களை தவறாக வழிநடத்துகிறது. ஆர்எல்டி “இந்தியா” கூட்டணியில் நீடித்து பாஜகவை தோற்கடிப்பார் கள்” என்று அவர் கூறினார்.
சமாஜ்வாதி கட்சி எம்பியான எஸ்.டி.ஹசன்,”ஆர்எல்டி பாஜக வுடன் தொடர்பில் இருப்பதாக வெளியான செய்திகள் பொய்யா னவை. எனக்குத் தெரிந்தபடி நாங் கள் (சமாஜ்வாதி)ஆர்எல்டி உட னான கூட்டணியை உறுதி செய்துள் ளோம்” என கூறியுள்ளார்.
“இந்தியா” கூட்டணியை சேதப் படுத்தும் அளவிற்கு எந்த நட வடிக்கையையும் எடுக்கமாட்டார்” என அகிலேஷின் மனைவியும், சமாஜ்வாதி கட்சி எம்பியுமான டிம் பிள் கூறியுள்ளார்.
ஆர்எல்டி தலைவர் ராஜீவ் மாலிக் மறுப்பு
ஆர்எல்டி “இந்தியா” கூட்டணி யில் இருந்து விலகி பாஜக கூட்டணியில் இணைய உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் பய னற்ற வதந்திகள் ஆகும். எங்கள் தலைவர் ஜெயந்த் சவுத்ரி பாஜக உடன் கைகோர்ப்பது போன்ற எந்த வொரு தவறான முடிவையும் எடுக்க மாட்டார். பாஜகவில் சேரும் பேச்சுக்கே இடமில்லை. அடுத்த சில வாரங்களில் பொதுத் தேர்த லுக்குத் தயாராகுங்கள் என தொண் டர்களிடம் கைகூப்பி கேட்டுக் கொள் கிறேன் என தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் கோரிக்கை விடுத் துள்ளார் ஆர்எல்டி மாநில தலை வர் ராஜீவ் மாலிக்.