மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்திக்கு புறப்பட்டு சென்ற இண்டிகோ விமானம், அடர்ந்த பனி மூட்டம் காரணமாக சனியன்று காலை வங்கதேச நாட்டின் தலைநகர் டாக்காவில் அவசரமாக தரை யிறக்கப்பட்டது. கவுகாத்தி விமான நிலையத்தில் தரையிறங்க முடியாததால், கவுகாத்தியில் இருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டாக்கா வுக்கு திருப்பி விடப்பட்டது இண்டிகோ விமானம்.
தெற்கு தில்லியின் கோட்லா முபாரக்பூர் பகுதியில் பணியில் இருந்தபோது போலீஸ் உதவி துணை ஆய்வாளர் (ஏஎஸ்ஐ) துப்பாக்கியால் தலையில் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கர்நாடகா மாநிலம், பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகாவில் மஞ்சரி கிராமத்தில் இறைச்சிக்காக விஷம் வைத்து 11 மயில்கள் கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி யுள்ளது.
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா வான ஜனவரி 22 அன்று பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர், அசாம், உத்தர் கண்ட் ஆகிய மாநிலங்களில் மது, இறைச்சி விற்ப னைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாஜக ஆளும் ஹரியானா மாநிலத்தின் முக்கிய நகரான குருகிராமில் ஹோட்டல் அறையில் சுட்டுக் கொல்லப்பட்ட மாடல் அழகி யின் உடல் கால்வாயில் கண்டெடுக்கப்பட்டது.
காஷ்மீரின் பூஞ்ச் பகுதி வழியாக சென்ற ராணுவ வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்கு தலால், அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடை பெற்று வருவதாக இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
நேபாளத்தில் உள்ள டாங் மாவட்டத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக் குள்ளானதில் இரண்டு இந்தியர்கள் உள்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பிரபல இந்துஸ்தான் இசை பாடகியும், பத்ம விபூஷன் விருது பெற்றவருமான பிரபா அத்ரே (92) சனியன்று காலை காலமானார்.
பீகார் தலைநகர் பாட்னா அருகே பிஹ்தா பகுதியில் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளியில் அங்குள்ள பெஞ்சுக்களை எரித்து மாணவர்களுக்கான மதிய உணவு சமைக்கப் பட்டது. இந்த சம்பவத்தை கவனத்தில் எடுத்துக் கொண்ட வட்டார கல்வி அதிகாரி, நவீஷ் குமார், “அந்த வீடியோ ஆய்வு செய்யப்பட்டு குற்றம் புரிந்த வர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
தில்லி
இந்தியாவில் வசதி படைத்தோர் எண்ணிக்கை 10 கோடியாக உயருமாம்
உலக அளவிலான முதலீட்டு வங்கி மற்றும் பத்திரங்கள் நிறு வனமான அமெரிக்காவைச் சேர்ந்த கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம் வசதிபடைத்தவர்களின் நிலைமை தொடர்பாக ஆண்டுதோறும் மதிப்பீட்டு அறிக்கை அளிப்பது வழக்கம். இந் நிலையில், நடப்பாண்டிற்கான அறிக்கை யில்,”ஆண்டுக்கு ரூ.8.30 லட்சம் சம்பா திப்பவர்கள் எண்ணிக்கை 2015-இல் 2.4 கோடியாக இருந்த நிலையில், அடுத்த 3 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 10 கோடியாக இருக்கும்” என கோல்டு மேன் சாக்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.