india

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

பல லட்சம் கோடி ரூபாய் பங்குச் சந்தை மோசடி செய்த அதானி வழக்கில் சிறப்பு விசார ணைக்குழுவின் விசாரணை தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மிகவும் ஏமாற்றத்தை தருகிறது. பல அம்சங்களில் இத்தீர்ப்பு மிகவும் துரதிருஷ்டவசமானது.  அதானி குழுமத்தின் மிகவும் பகிரங்கமான மோசடிகள் குறித்த குற்றச்சாட்டுக்கள் பற்றி மிக விரிவான முறையில் விசாரணை நடத்த வேண்டிய அமைப்பு செபி ஆகும். சட்டப்பூர்வமான, அதிகாரம் வாய்ந்த செபி அமைப்பு தனது பணியை  எந்தவிதத்திலும் முறையாக, முழுமையாக செய்யவில்லை. இந்தப் பின்னணியில் உச்சநீதி மன்றமும் அதானியின் முறைகேடுகளை அங்கீகரிக்கும் விதத்தில், செபி அமைப்பின் நம்பகத்தன்மையை கேள்விக்கு உள்ளாக்காமல், அதன் செயல்பாடுகளை அங்கீகரித்திருப்பது கவலையை ஏற்படுத்துகிறது.