71% மதிப்பெண்களுடன் கேரளா வேலை வாய்ப்புக்கான முன்னணி மாநிலங்களில் ஒன்றாக வளர்ந்து வருவதாக இந்திய திறன்கள் அறிக்கை காட்டுகிறது. பெண்களுக்கான வாய்ப்புகளில் சிறந்து விளங்கும் முதல் 4 விருப்பமான வேலைவாய்ப்பு இடங்களில் இதுவும் ஒன்றாகும்.
சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் தாமஸ் ஐசக்
அரசியலமைப்பு, இந்தியர்கள் பற்றி மாற்று கருத்து கொண்டிருப்பதை சாவர்க்கரே எழுதியிருந்தார். வேதத்திற்கு அடுத்ததாக வணங்க வேண்டியது மனுஸ்மிருதி என்று சாவர்க்கர் கூறினார். உங்கள் தலைவரின் வார்த்தையை நீங்கள் (பாஜக) ஆதரிக்கிறீர்களா? இல்லையா?
மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
இந்தியாவில் பச்சிளம் குழந்தைகளுக்கான உணவாக விற்கப்படும் நெஸ்லே செர்லாக்கின் ஒரு கரண்டி மாவில் 2.7 கிராம் சர்க்கரை இருப்பதாகவும், அதுவே இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியில் சர்க்கரை சேர்க்கப்படாமல் விற்கப்படு கிறது என்றும் சுவிஸ் அறிக்கை வெளியாகியுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலை நெஸ்லே இந்தியாவில் நடைமுறைப்படுத்தத் தவறியுள்ளது.
திமுக நாடாளுமன்ற தலைவர் கனிமொழி
உத்தவ் தாக்கரே பாஜகவின் இந்துத்துவாவை அம்பலப்படுத்தியதை திசைதிருப்பும் விதமாக தாதர் கிழக்கில் உள்ள ஹனுமான் கோவிலை இடிக்க ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது. இது வன்முறைக்கான சந்தேகத்தை தூண்டுகிறது.
சிவசேனா (உத்தவ்) எம்.எல்.ஏ ஆதித்யா தாக்கரே
திருப்பதி லட்டு சர்ச்சை தொடர்பாக திருமலையில் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் சோதனை நடத்தினர்.
அருணாச்சல பிரதேச மாநிலம் நஹர்லகுனில் உள்ள புனித அல்போன்சா பள்ளியின் தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இமாச்சலப் பிரதேச மாநிலம் ஹமிபூர் மாவட் டத்தைச் சேர்ந்த பங்கஜ் (17) என்ற பி.டெக் மாணவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தேர்வில் தோல்வியடைந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளி யாகியுள்ளன.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் “புஷ்பா 2” படத்தின் சிறப்பு காட்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் கணவர் பாஸ்கர், நடிகர் அல்லு அர்ஜுன் மீதான புகாரை வாபஸ் பெறு வதாக தெரிவித்துள்ளார். அல்லு அர்ஜுன் கைது நடவடிக்கையை தொடர்ந்து பாஸ்கர் புகாரை வாபஸ் பெற்றுள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
“நிறுவனங்களோ அல்லது தனி நபரோ ஆய்வுக்கு உட்படுத்தப்படாவிட்டால் சீரழிவு ஏற்படுவதை தடுக்க முடியாது” என குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு நிவாரண நிதி உதவியை விரைவாக வழங்கக் கோரி பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.,க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“இந்தியா கூட்டணி தலைமை பொறுப்புத் தொடர்பான விவகாரத்தை காங்கிரஸ் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது” என ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உடல்நலக்குறைவால் தில்லி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் தெற்கு கொல்கத்தாவின் டோலிகஞ்ச் பகுதியின் குப்பைக் கிடங்கில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் பல்ராம்பூர் பகுதியில் 16 வயது சிறுமி அவரது கிராமத்தைச் சேர்ந்த ஒருவரால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். 20 இடங்களில் கத்திக்குத்து இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.