india

img

இந்தியாவில் புதிதாக 752 பேருக்கு கோவிட் பாதிப்பு!

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 752 பேர் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஒரேநாளில் புதிதாக 752 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில், 3,420 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4.50 கோடி(4,50,07,964) ஆக உள்ளது.

கேரளாவில் 2 பேர், கர்நாடகாவில் 2 பேர், ராஜஸ்தானில் 1 என மொத்தம் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,44,71,212 ஆக அதிகரித்துள்ளது, மேலும் தேசிய மீட்பு விகிதம் 98.%ஆக உள்ளது எனச் சுகாதார அமைச்சகத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறப்பு விகிதம் 1.19%ஆக  உள்ளது.

நாட்டில் இதுவரை 220.67 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அமைச்சகத்தின் இணையதளம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 21 வரை, இந்தியாவில் கோவிட்-19 JN.1 தொற்று ஏற்பட்டு 22 வழக்குகள் பதிவாகியுள்ளன.

கோவிட்-19 JN.1 தொற்றால் ஒரே நாளில் 265 புதிய நோய்த்தொற்றுகள் மற்றும் 1 உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

சுகாதார அமைப்பு சமீபத்தில் JN.1 என்பது BA.2.86-இல் இருந்து வேறுபட்டது. இருப்பினும், தற்போதைய சான்றுகளின் அடிப்படையில் JN.1 ஆல் ஒட்டுமொத்த ஆபத்து குறைவாகவே உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியது.

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட், JN.1 கோவிட் வகைக்கு எதிரான தடுப்பூசியின் உரிமத்திற்கு விண்ணப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, 2020 ஆம் ஆண்டில் தொற்றுநோய்களின் போது அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து கோவிஷீல்டு தடுப்பூசிகளைத் தயாரித்தது குறிப்பிடத்தக்கது.