india

img

குரு கிராமில் தீ விபத்து - 700 குடிசைகள் நாசம்

குருகிராமில் ஏற்பட்ட தீ விபத்தில் 700 குடிசைகள் எரிந்து நாசமாகி உள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
குருகிராமில் நாதுபூர் கிராமத்தில் நேற்று இரவு எதிர்பாரத விதமாக  தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்ல் 700 குடிசைகள் எரிந்து சாம்பலானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் எதுவும் ஏற்பட்டதாக தகவல்கள் இதுவரை வெளியாக வில்லை. இந்நிலையில் நேற்று இரவு சட்ட விரோதமாக மின்சாரம் எடுத்த போது தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

;