india

img

3 ஆண்டுகளில் போலீஸ் காவலில் இருந்த 5,569 கைதிகள் உயிரிழப்பு -  மத்திய இணையமைச்சர் 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 19 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், போலீஸ் காவலில் இருக்கும் போது பலியான கைதிகள் குறித்த விவரங்களைக் கேட்ட நாடாளுமன்ற உறுப்பினர்க்கு, மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் இன்று பதில் அத்துள்ளார். 

இதில், கடந்த 2018 முதல் 2021 ஆம் ஆண்டு வரை காவலிலிருந்த 5,569 கைதிகள் உயிரிழந்து உள்ளனர். அதில், நீதிமன்றக் காவலில் 5,221 பேரும், போலீஸ் காவலில் 348 பேரும் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.  2018 மற்றும் 2019  வரை 1,933 கைதிகள் உயிரிழந்துள்ளனர். 2019 முதல் 2020 வரை 1,696 கைதிகளும், 2020 முதல் தற்போது வரை 1,940 கைதிகளும் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மூன்று ஆண்டுகளில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் 1,318 கைதிகள் உயிரிழந்துள்ளனர். அதில், போலீஸ் காவலில் 23 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் 232 கைதிகள் உயிரிழந்து உள்ளனர். அதில், போலீஸ் காவலில் 25 பேர் பலியாகி உள்ளதாகவும் மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார். 

;