india

img

இந்தியாவில் புதிதாக 53256 பேருக்கு கொரோனா

இந்தியாவில் புதிதாக 53256 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது தற்போது படிப்படியாக குறைய துவங்கி உள்ளது. 
இந்நிலையில் இன்று மத்திய சுகாதார அமைச்சகம் கொரோனா தொற்று பாதிப்பு குறித்து  அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 53,256 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 2,99,35,221 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் ஒரே நாளில் 1422 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,88,135 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 78,190 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,88,44,199 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 7,02,887 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
பொது மக்களை கொரோனா தொற்றில் இருந்த  பாதுகாக்கும் நடவடிக்கையாக  நேற்று வரை 28,00,36,898 டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

;