நிலக்கரிச் சுரங்க ஊழலில் தொடர்பு இருப்பதாகக் கூறி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், முன்னாள் முதல்வரு மான ஹேமந்த் சோரன் புதனன்று இரவு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ராஞ்சியில் உள்ள ஹோட்வார் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.
தொடர்ந்து வியாழனன்று காலை ராஞ்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறையினர் ஆஜர் படுத்தினர். இந்நிலையில், ஹேமந்த் சோரனை 10 நாள் காவ லில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறை அனுமதி கோரியது. ஆனால் சிறப்பு நீதிமன்றம் அமலாக்கத் துறையின் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்து, ஒரு நாள் நீதிமன்ற காவலில் வைக்க அனுமதி வழங்கி யுள்ளது.
இதற்கிடையில் அமலாக்கத் துறை சம்மனுக்கு எதிராக ஹேமந்த் சோரன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனு வெள்ளி யன்று நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எம்.எம்.சுந்தரேஷ், பேலா எம். திரிவேதி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. ஹேமந்த் சோரன் சார்பில் வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபி ஷேக் மனு சிங்வி ஆஜராயினர். விசாரணையின்போது, “இந்த வழக்கை நீங்கள் உயர்நீதிமன்றத் தில் ஏன் மனு தாக்கல் செய்ய வில்லை? உயர்நீதிமன்றங்கள் அர சியலமைப்பு நீதிமன்றங்கள். இன்று நாம் ஒருவரை இதுபோன்று அனுமதித்தால், அனைவரையும் பின்னாளில் அனுமதிக்க வேண்டிய சூழல் உருவாகும்.
எனவே உயர்நீதி மன்றத்தை நாடுங்கள்” என நீதிபதி கள் குறிப்பிட்டனர். “உச்சநீதிமன்றத்துக்கு தன்னிச் சையான அதிகாரங்கள் உள்ளன” என்று மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்ட நிலையில், இதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள்,”ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. எனவே உயர்நீதிமன்றத்தை நாட வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர். உச்சநீதிமன்ற உத்தரவால் ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.