இந்தியாவில் கொரோனாவுக்கு 329 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர் என இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை மிக மோசமாக பரவி வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையில் இதுவரை 329 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர் என இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
இதில் பெரும்பாலும் 30 முதல் 55 வயதுக்குள்பட்டவர்கள் ஆவார். அதிகபட்சமாக பிகார் மாநிலத்தில் 80 மருத்துவர்கள் பலியாகியுள்ளனர்.