மைக்ரோசாஃப்டில் இருந்த பிழையை சுட்டிக்காட்டிய இளம்பெண்ணுக்கு அந்நிறுவனம் ரூ.22 லட்சம் பரிசு வழங்கியுள்ளது.
தில்லியைச் சேர்ந்த அதிதீ சிங் என்ற 20 வயது இளம் பெண் இணைய பாதுகாப்பு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பு மேப் மை இந்தியா நிறுவனத்தில் இணையப் பிழைகளைக் கண்டறிந்ததால், கல்வி ஆவணங்களின்றி அவருக்கு அந்நிறுவனம் பணியாணை வழங்கியது. இந்நிலையில் தற்போது அவர் மைக்ரோசாஃப் நிறுவனத்தின் ஆர்.இ.சி. எனப்படும் தொலைக் குறியீடு செயல்படுத்துதல் பிரிவில் உள்ள பிழையை கண்டறிந்து அந்நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். இதனால், அவரைப் பாராட்டும் விதமாக அந்நிறுவனம் 30 ஆயிரம் டாலர் தொகையை பரிசாக அறிவித்தது. இந்திய மதிப்பில் அது ரூ.22 லட்சமாகும்.
தில்லியைச் சேர்ந்த அவர் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இதுபோன்று முகநூலில் பிழையைக் கண்டறிந்ததால், ரூ.5.5 லட்சம் ஊக்கத்தொகையாகப் பெற்றுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.