india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் ஸ்ரீகந்த் அருகே ஏற்பட்ட மேகவெடிப்பில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர்.

“ஒசூரில் புதிய விமான நிலையம் அமைக்க ஒன்றிய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். குஜராத்துக்கு மட்டும் முன்னுரிமை அளிக்காமல் பிற மாநிலங்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். குறிப்பாக சென்னை விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்கு தேவையான இடம் இருப்பதால் விரிவாக்க பணிகளை மேற்கொள்ள வேண்டும்” என நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி., தயாநிதி மாறன் வலியுறுத்தியுள்ளார். 

முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரிய வழக்கு வெள்ளியன்று உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணி களை ஆய்வு செய்ய இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணையக் குழுவினர் வியாழனன்று ஸ்ரீநகர் சென்றடைந்தனர்.

வங்கதேசத்தில் உள்ள இந்திய விசா மையங்கள் அனைத்தும் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.