india

img

11வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி - திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி நடைபெறும்

புதுதில்லி, ஜன.22-
மத்திய அரசுடனான 11ஆம் கட்ட பேச்சுவார்த்தையிலும் விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு ஏற்க மறுத்துள்ளது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் 50 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசுடன் ஏற்கெனவே நடைபெற்ற 10 கட்டப் பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) விஞ்ஞான் பவனில் சுமார் 4 மணிநேரம் 11ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. 
ஆனால், இந்த பேச்சுவார்த்தையிலும் விவசாயிகளின் எந்தவித கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்க மறுத்துள்ளது.
ஆகவே, திட்டமிட்டபடி  ஜனவரி 26ஆம் தேதி டிராக்டர் பேரணி நடைபெறும் என்றும் விவசாய சங்கத்தினர் திட்டவட்டமாகக் தெரிவித்துள்ளனர்.

;