இந்தியாவில் ஒரே நாளில் 81466 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது நாட்டு மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் கொரோனா தாக்குதல் கடந்த சில தினங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் 81,466 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து , இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,23,03,131 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 469 பேர் பலியாகி உள்ளனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 1,63,396 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1,15,25,039 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 50,356 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 6,14,696 பேர் சிகிச்சையில் உள்ளனர்.