india

img

பனியுகத்தின் பயங்கரம் மீண்டும் சம்பவிக்குமோ?- சிதம்பரம் இரவிச்சந்திரன்

 பனியுகத்தில் (ice age) நிகழ்ந்த பயங்கரம் மீண்டும் சம்பவிக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். பூமியில் வெப்பம் குறைந்து சகலமும் குளிர்ந்து உறைந்துபோகும் பனி மூடும்  சம்பவம் கடைசியாக 11,000 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது. அன்று பூமியில் வளைந்து  கூர்மையான பற்கள் உடைய சீபர் டூத் என்று அழைக்கப்படும் பிரிவைச் சேர்ந்த உயிரினங்கள் வாழ்ந்தன. பல இன புலிகள், சிறுத்தைகள், சிங்கங்கள் இந்த குடும் பத்தைச் சேர்ந்தவை. ஆனால் இவற்றின் இனங்கள் அன்று முற்றிலும் அழிந்து போயின.

உணவில்லாமல் உயிரிழந்த உயிரினங்கள்
மற்ற உயிரினங்கள் அனைத்தையும் அழித்த கொடுங்குளிரைக் கூட சமாளித்து  வாழும் திறன் பெற்றிருந்த இந்த விலங்குகள்  எவ்வாரு முற்றிலும் அழிந்தன என்பது பெரும் புதிராக இருந்துவருகிறது. இந்த உயிரினங்கள் உணவாக உண்டுவந்த சிறிய விலங்குகள் அழிந்துபோனதால் இவை  உண்ண உணவின்றி பட்டினி கிடந்து இறந்தன என்று பரவலாக நம்பப்படுகிறது.

வரலாற்றில் இருந்து பாடம் கற்கவேண்டிய மனிதன்
  சரித்திரத்தில் இருந்து மனிதன் பாடம் கற்றுக்கொண்டு வாழவேண்டும். இல்லையென்றால் மனிதகுலத்திற்குப் பெரும் துயரங்கள் காத்திருக்கின்றன. இத்தகைய ஒரு பனியுகத்தில் ஏற்பட்ட பயங்கரப் பேரிடர் மனிதகுலத்தையே அச்சுறுத்தும்வகையில் மீண்டும் விரைவில் நேரலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இப்பேரிடர் மனிதனை நேரடி யாகப் பாதிக்கப்போவதில்லை என்றாலும் இது மனிதகுலத்திற்கு ஒருபோதும் மன்னிப்பு  தராத இயற்கையின் கடும் தண்டனையாக அமையும் என்று நிபுணர்கள் எச்சரிக் கின்றனர்.

இரைகள் இல்லாமல் வாழ்வது எப்படி?
மார்ஜாரா பிரிவைச் சேர்ந்த உயிரினங் களுக்கு பனியுகத்தில் நிகழ்ந்த அதே துயரம் புதிய காலத்தில் மீண்டும் ஏற்படும் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர். புலிகள், சிறுத்தைகள், சிங்கங்களின் இயல்பான இரைகள் இல்லாமல் போவதே இவை அழியக் காரணமாக அமையும். முன்பு பனியுகத்தில் இதே பேரிடர் ஏற்பட்டபோது நான்கு வகையான சீபர் டூத் இனப் புலிகள், ஏவ் என்ற பிரிவைச் சேர்ந்த அமெரிக்க சிங்கங்கள், அமெரிக்க இனச் சிறுத்தைகள் அழிந்துபோயின. இரைகளாகும் உயிரினங்களின் நிலை பூமியில் இப்போது மோசமடைந்து வருகிறது. மனிதனின் வேட்டையாடல், வன அழிப்பு ஆகியவையே இவ்வாறு பெரிய உயிரினங்களுக்கு அவை உண்ணும் இரைகள் இல்லாமல் போகக் காரணம். சுமத்ரா காடுகளில் அபூர்வமாகக் காணப் படும் சண்டே மேகப்புலிகள் (Sunday clouded tiger) போன்ற விலங்குகள் பூமியில் சில சிறப்பான இடங்களில் மட்டுமே வாழ்கின்றன.   பனியுகப் பேரிடர் மீண்டும் ஏற்படும்போது இத்தகைய உயிரினங்களே மோசமாகப் பாதிக்கப்படும். மார்ஜாரா வம்சத்தைச் சேர்ந்த பெரிய விலங்குகள் ஒவ்வொன்றும் இதுபோல தனிச்சிறப்புமிக்க வாழி டங்களைச் சார்ந்தே வாழ்கின்றன. இந்த நிலை நீடித்தால் மார்ஜாரா குடும்பத்தைச் சேர்ந்த விலங்குகள் விரைவில் அழிந்து போகும் என்று ஆய்வாளர்கள் அஞ்சுகின்றனர். இன்றுள்ள நிலை தொடர்ந்தால் ஆப்பிரிக்க சிங்கங்கள் வாழும் பகுதிகளில் அவை உணவாக உட்கொள்ளும் சிறிய உயிரினங்களின் எண்ணிக்கையில் 39 விழுக்காடு குறைவு ஏற்படும். புலிகளின் உணவில் 37விழுக்காடு குறைவு ஏற்படும் என்று நவீனத் தொழில்நுட்பங்களை அடிப் படையாகக் கொண்டு ஆய்வாளர்கள் கணக் கிட்டுள்ளனர். அத்தகைய சூழ்நிலையில் மார்ஜாரா குடும்பத்தைச் சேர்ந்த பெரிய விலங்குகள் அதிக நாள் உயிருடன் வாழ இயலாமல் போகும். தனிச்சிறப்பான வாழிட சூழலை நம்பியே வாழும் இது போன்ற உயிரினங்கள் முதலில் அழியும். தொடந்து சிறுத்தைகள், சிங்கங்கள் பட்டினி  கிடக்க நேரிடும். அழியுந்ம் நிலைக்குத் தள்ளப்படும். காலநிலை மாற்றத்தால் சீரழிந்துவரும் பூமியில் இந்நிலை இன்னுமொரு பேரழிவாக அமையும் என்று அஞ்சப்படுகிறது.

இந்தியாவிற்கும் இதே நிலை
இந்த நிலை இந்தியாவிற்கும் ஏர்படும். குஜராத் கிர் காடுகளை நம்பி வாழும் ஆசிய சிங்கங்களுக்கு உண்ண உணவில்லா மல் போகும் நிலை ஏற்படும். வேட்டைக்காரர் களிடம் இருந்து தப்பிப்பிழைக்க புலிகள் படாதபாடு படும்போது இரைகளும் இல்லாமல் போகும் பயங்கரம் ஏர்படும். கேரளா, தமிழ்நாடு உட்பட தென்னிந்திய பகுதிகளில் புலிகளின் எண்ணிக்கை குறைந்துபோகும்.

என்ன செய்யலாம்?
இந்த நிலை தவிர்க்கப்படவேண்டு மென்றால் வன விலங்குகளின் வாழிடம் பாதுகாக்கப்படுவதுடன் அவற்றிற்கு போதுமான உணவாகும் சிறிய உயிரினங் களும் காடுகளில் கிடைக்கும்படி செய்ய வேண்டும். காடுகளை அழித்தல், வேட்டை யாடுதல் முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும். அரசியல் லாப நஷ்டங்களைக் கணக்குப் போட்டு செயல்படாமல் ஆட்சியாளர்கள் காட்டிற்கும் நாட்டிற்கும் நல்லது செய்ய உண்மையுடன் நடந்து கொள்ளவேண்டும்.