india

img

இந்தியாவில் ஒரேநாளில் கொரோனாவுக்கு 4,187 போ் உயிரிழப்பு!

இந்தியாவில் ஒரேநாளில் கொரோனாவுக்கு 4,187 போ் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 4 லட்சத்து ஓராயிரத்து 78 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 18 லட்சத்து 92 ஆயிரத்து 676 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்புகளால் கடந்த 24 மணிநேரத்தில் 4,187 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,38,270 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து 18 ஆயிரத்து 609 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 79 லட்சத்து 30 ஆயிரத்து 960ஆக உயர்வடைந்துள்ளது. 37,23,446 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

;