india

img

சி-விஜில் செயலி மூலம் தேர்தல் குறித்த புகார் அளிக்களாம் - தலைமைத் தேர்தல் ஆணையர் 

புதுதில்லி, பிப்.26-
தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் குறித்த புகார்களை ‘சி-விஜில்’ செயலி மூலம் அளிக்கலாம் என தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறுகையில், தமிழகம், புதுச்சேரி, கேரளத்துக்கு ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும்.
மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாகவும், அசாமில் 3 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறும் என்று தலைமைத்தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார்.
மேலும், தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் தொடர்பான புகார்களை தேர்தல் ஆணையத்தில் ‘இசி-விஜில்’ என்ற தேர்தல் ஆணையத்தின் செயலி மூலம் பதிவு செய்யலாம் என அவர் தெரிவித்தார்.

;