india

img

கொரோனாவால் ஒரேநாளில் 2023 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2023 பேர் உயிரிழந்துள்ளனர்
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து இந்தியாவில் இன்று கொரோனா தொற்றின் ஒருநாள் பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கி உள்ளது. 
இந்நிலையில் இன்று காலை கொரோனா தொற்று விபரங்கள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,95,041 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,56,16,130ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 2,023 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கொரோனா பாதிப்பால்  உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,85,553 ஆக உயர்ந்துள்ளது. 
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,67,457 பேர் குணமடைந்துள்ளனர்.  கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,32,76,039 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 21,57,538 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 13,01,19,310 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் இதுவரை 27 கோடியே 10 லட்சத்து 53 ஆயிரத்து 392 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்றும், அதில் நேற்று ஒருநாளில் மட்டும் 16,39.357 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

;